சென்னை மழை: உங்கள் வளர்ப்பு பிராணிகளைப் பாதுகாத்திட இங்கே வாருங்கள் - கனிகா
சென்னை: "மழையால் தவிக்கும் உங்கள் செல்ல பிராணிகளைப் பாதுகாத்திட இங்கே கொண்டு வாருங்கள்" என்று நடிகை கனிகா தெரிவித்திருக்கிறார்.
மழை, வெள்ளத்தால் மக்கள் படும் அவஸ்தைகளை விட வாயில்லாப் பிராணிகள் படும் துன்பங்கள் தான் அதிகம். பேசத் தெரிந்த மனிதர்களே இவ்வளவு துன்பங்களை அனுபவிக்கையில் வாயில்லாத அந்தப் பிராணிகள் படும்பாடு எழுத்தில் அடங்காது.

இந்த நிலையில் மழையால் பாதிக்கப்பட்ட சென்னை மக்களுக்கு உதவிகள் செய்து வரும் நடிகை கனிகா பின்வரும் தகவல் ஒன்றை தனது பேஸ்புக் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார்.
"டிடிகே ரோட்டில் உள்ள சங்கரா ஹால் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட செல்லப் பிராணிகளுக்க திறந்திருக்கிறது. உங்களிடம் செல்லப் பிராணிகள் இருந்து அவற்றிற்கு மருத்துவ உதவியும், தங்குமிடமும் தேவைப்பட்டால் நீங்கள் இங்கே வரலாம்.
உங்களுக்கு வரும் வழி தெரியவில்லை அல்லது ஏதேனும் உதவி தேவையெனில் நீங்கள் இந்த எண்ணில்(04424990870) எங்களைத் தொடர்பு கொள்ளலாம். நாங்கள் தொண்டு செய்வோர் மற்றும் மருத்துவ உதவியுடன் இங்கே காத்திருக்கிறோம்"என்று கனிகா கூறியிருக்கிறார்.
உங்கள் பக்கத்தில் யாரேனும் செல்லப் பிராணிகளை வைத்திருந்தால் அவர்களுக்கு நீங்கள் இந்தத் தகவலை தெரிவிக்கலாமே!












Click it and Unblock the Notifications