சென்னையில் வேகமாகப் பரவுகிறது டெங்கு... சிறுமி பலி - 35 பேர் பாதிப்பு
சென்னை: தனியார் மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 3 வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் சென்னையில் பீதியை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில், 20 நாட்களில், 35 பேருக்கு, டெங்கு காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சென்னையை அடுத்த கேளம்பாக்கம் காயார் கிராமத்தை சேர்ந்தவர் பிரான்ஸ். மளிகை கடை நடத்தும் இவரது 3 வயது மகள் ஜூலியட். காய்ச்சல் காரணமாக கடந்த 16-ம் தேதி ஜூலியட்டை தாம்பரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். மருத்துவப் பரிசோதனையில் ஜூலியட்டுக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து கடந்த 17-ம் தேதி மேல் சிகிச்சைக்காக நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஜூலியட்டை சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் குழுவினர் குழந்தையின் டெங்கு காய்ச்சலை குணப்படுத்த சிகிச்சை அளித்து வந்தனர். இந்நிலையில் நேற்று காலை குழந்தை உயிரிழந்தது.
இதுதொடர்பாக சுகாதாரத் துறை அதிகாரிகளிடம் கேட்ட போது, "திருப்போரூர் பகுதியில் மருத்துவ முகாம் நடத்திய போது, இந்த குழந்தை டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சென்னை தனியார் மருத்துவ மனையில் சிகிச்சைப் பெற்று வருவதாக தகவல் கிடைத்தது. குழந்தையின் இறப்பு குறித்த அறிக்கையை சம்பந்தப்பட்ட சுகாதாரத்துறை அலுவலரிடம் கேட்டிருக்கிறோம்" என்றார்.

2500 பேர் பாதிப்பு
தமிழகம் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. டெங்குவிற்கு இதுவரை 2,500 பேர் வரை, பாதிக்கப்பட்டிருப்பதாக சுகாதார துறை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. சென்னையில் இதுவரை, 90 பேர், டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உள்ளதாக தெரியவந்துள்ளது.ஜ

35 பேருக்கு டெங்கு
ஜனவரி முதல் செப்டம்பர் 30ம் தேதி வரை, 55 பேருக்கு மட்டுமே டெங்கு உறுதி செய்யப்பட்டது. இந்த மாதம், 1ம் தேதி முதல், 20ம் தேதி வரை, 35 பேருக்கு டெங்கு உறுதி செய்யப்பட்டுள்ளது.
குறுகிய நாட்களில், டெங்கு பாதிப்பு வேகமாக பரவி வருவதால், மாநகராட்சி சுகாதார துறையினர் உஷார்படுத்தப்பட்டு உள்ளனர்.

அமைச்சர் ஆய்வு
கடந்த ஆண்டை விட, சென்னையில் இந்த ஆண்டு டெங்கு பாதிப்பு அதிகமாக இருப்பதாக கூறப்படுகிறது. தனியார் மருத்துவமனைகள் மறைக்காமல் தகவல்களை அளிக்க வேண்டும் என, சுகாதார துறை அமைச்சர் அறிவுறுத்தி உள்ளார். டெங்கு விழிப்புணர்வு முகாம்களும், நோய் பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளில், டெங்கு கொசுக்களை அழிக்கும் நடவடிக்கைகளும் முடுக்கி விடப்பட்டுள்ளன.

மறைக்கும் மருத்துவமனைகள்
சில மருத்துவமனைகள் தகவல்களை மறைப்பதாக கூறப்படுகிறது. சம்பந்தப்பட்ட மருத்துவமனைகளுக்கு, மாநகராட்சி, 'நோட்டீஸ்' வழங்கி இருப்பதாகவும், பொது சுகாதார சட்டப்படி இந்த மருத்துவமனைகள் மீது, ஒழுங்கு நடவடிக்கை எடுக்க இருப்பதாகவும், மாநகராட்சியின் சுகாதார துறை வட்டாரங்கள் தெரிவித்தன. அதேபோல், மாநகராட்சியின் சில ஊழியர்களும், தங்கள் பகுதியில் ஏற்பட்டிருந்த டெங்கு பாதிப்பு குறித்து, உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்காமல் மறைத்து உள்ளனர்.
-
தவெக விற்கு தேர்தலில் ஆதரவு கிடையாது.. ‘ஜனநாயகன்’ லீக் காட்சிகளால் பின்வாங்கிய முஸ்லிம் மக்கள் கழகம் -
திமுகவிற்கு ‘குட்பை'.. விஜயின் தவெகவிற்கு மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் ஆதரவு! -
பெட்ரோல் டூவீலர்களுக்கு மொத்தமாக தடை.. அரசு திட்டவட்டம்! ஏற்கனவே பைக் வைத்திருப்போர் என்ன செய்யணும்? -
இரவிலேயே பாய் விரித்து இடம்.. நெல்லையில் எல்கேஜி அட்மிஷனுக்காக விடிய விடிய காத்திருந்த பெற்றோர்கள் -
மணி பிளான்ட் இனி தேவையில்லை.. காந்தம் போல பணத்தை ஈர்க்கும் 'அந்த' ஒரு செடி! வீட்டில் எங்கே வைக்கலாம் -
6 மாதங்களில் அண்ணாமலைக்கு தமிழக முதல்வர் பதவி! இபிஎஸ் தலையில் இடியை இறக்கிய திருமாவளவன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ்: மயில் கர்ப்பத்தை பற்றி பழனி சொன்ன விஷயம்! கோபத்தில் சரவணன்.. கதிர் செய்த நல்ல விஷயம் -
Gold: பசிபிக் கடலுக்கடியில் குவிந்து கிடக்கும் ”தங்கம்” கண்டுபிடித்த விஞ்ஞானிகள்.. எம்மாடியோவ்! -
ராகுல் காந்தியை பார்த்ததும்.. திரும்பி வந்து பேசிய பிரதமர் மோடி.. நாடாளுமன்ற வளாகத்தில் நடந்த சுவாரசியம் -
சிறகடிக்க ஆசை: விஜயா செய்த சதி, ஜெயிலுக்கு போகும் மொத்த குடும்பம்.. மனோஜால் ஏற்படும் விபரீதம்! ஜெயித்த ரோகிணி -
ஈரான் கொடுத்த ஷாக்.. ஆடிப்போன அமெரிக்கா.. பூதாகரமாக வெடிக்கும் கண்ணிவெடி விவகாரம்! -
தேர்தல் ஆணையத்தின் அதிரடி ‘டிரான்ஸ்பர்’ மேளா.. காலியான எடப்பாடி கணக்கு... ஸ்டாலின் பவர்ஃபுல் மூவ்!












Click it and Unblock the Notifications