100 மார்க் எடுத்த மாணவிகளை விமானத்தில் பறக்க வைத்த அரசு பள்ளி ஆசிரியை
100 மதிப்பெண் பெற்றதால் தனது சொந்த செலவில் இரு மாணவிகளை விமானத்தில் அரசு ஆசிரியை அழைத்துச் சென்ற சம்பவம் மாணவர்கள் மத்தியில் ஆர்வத்தை தூண்டியுள்ளது.
Recommended Video

சென்னை: சென்னை அம்பத்தூர் பெண்கள் பள்ளி ஆசிரியை 100 மதிப்பெண்கள் எடுத்த இரு மாணவிகளை தனது சொந்த செலவில் விமானத்தில் அழைத்துச் சென்றுள்ளார்.
அம்பத்தூரில் பெருந்தலைவர் காமராஜர் அரசுப் பெண்கள் பள்ளி உள்ளது. இங்கு ஆயிரக்கணக்கான மாணவர்கள் படித்து வருகின்றனர். இங்கு சமூக அறிவியல் பாடம் எடுப்பவர் செல்வகுமார்.
இவர் 10ஆம் வகுப்பு மாணவிகளுக்கு வகுப்பு எடுக்கிறார். ஒரு நாள் வகுப்பறையில் வரைப்படங்கள் குறித்தும், விமானப் போக்குவரத்து உள்ள இடங்களை வரைப்படத்தில் குறிப்பது குறித்தும் பாடம் நடத்தி வந்தார்.

ஆசிரியைக்கு தெரியவந்தது
அப்போது விமான பயணம் குறித்து பாடத்தின்போது மாணவிகள் ஆச்சரியத்துடன் கவனித்தனர். இதனால் விமான பயணம் குறித்து மாணவிகள் அறியவில்லை என்பது ஆசிரியைக்கு தெரியவந்தது.

அதிக மதிப்பெண்கள்
இதையடுத்து படிப்பை ஊக்குவிக்கவும், மாணவிகள் அதிக மதிப்பெண்கள் பெறவும் ஆசிரியை செல்வகுமாரி ஒரு திட்டத்தை வகுத்தார். அதை வகுப்பில் தெரிவித்தார். அதாவது சமூக அறிவியல் பாடத்தில் 100-க்கு 100 மதிப்பெண்கள் பெறும் மாணவிகளை விமானத்தில் அழைத்து செல்வதாக அறிவித்தார்.

ஆர்வம் அதிகரித்தது
இதனால் குஷியான மாணவிகள் படிப்பில் மேலும் ஆர்வத்தை காட்டினர். ஆசிரியை அழைக்கும்போதெல்லாம் வந்து கூடுதல் நேரம் ஒதுக்கி கல்வி கற்றனர். தேர்வை எதிர்கொண்டனர். அதில் தமிழ் வழிக் கல்வியில் படித்த சரண்யா என்ற மாணவியும், ஆங்கில வழிக் கல்வியில் படித்த யமுனா என்ற மாணவியும் ஆசிரியை கூறியது போல் 100 மதிப்பெண்கள் பெற்றனர்.

இரு மாணவிகள் சென்டம்
மேலும் 6 மாணவிகள் 91 மதிப்பெண்கள் பெற்றனர். இதையடுத்து ஆசிரியை உறுதியளித்தபடி தனது சொந்த செலவில் இரு மாணவிகளையும் சென்னையிலிருந்து கோவைக்கு விமானத்தில் அழைத்து சென்றார். இதனால் மாணவிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

6 மாணவிகளை அழைத்து செல்ல முடியவில்லை
இதுகுறித்து ஆசிரியை செல்வகுமாரி கூறுகையில், மாணவிகளுக்கு கல்வி மீது ஆர்வத்தை தூண்டி விடவே இதுபோன்ற ஏற்பாட்டை செய்தேன். அடுத்தடுத்த தேர்வுகளில் 100 மதிப்பெண் எடுக்கும் மாணவிகளை விமானத்தில் அழைத்து செல்வேன். 91 மதிப்பெண்கள் எடுத்த 6 மாணவிகளை அழைத்து செல்ல முடியாதது வேதனை அளிக்கிறது என்றார்.

ஆசிரியையின் கல்வி பணி தொடரட்டும்
தன்னிடம் டியூசன் படித்தால்தான் பாஸ் செய்ய வைப்பேன் என்று கூறும் ஒரு சில ஆசிரியர்களுக்கு மத்தியில் தனது கை காசை போட்டு மாணவிகளை விமானத்தில் அழைத்து சென்ற ஆசிரியை செல்வகுமாரியை வாழ்த்துவோம்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications