Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சென்னை புத்தகக் கண்காட்சி: புத்தக பிரியர்களுக்காக 1 லட்சம் தலைப்புகளில் 1 கோடி புத்தகங்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: 39ஆவது புத்தகக் கண்காட்சி சென்னை தீவுத்திடலில் இன்று முதல் தொடங்கியுள்ளது. 13ம் தேதி வரை நடைபெறும் புத்தகக் கண்காட்சியில் 700 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் 450 பதிப்பாளர்கள் பங்கேற்கின்றனர்.

பபாசி எனப்படும் தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் ஆண்டுதோறும் சென்னையில் புத்தக கண்காட்சியை நடத்திவருகிறது. ஆண்டுதோறும் வாசகர்களுக்கு இந்த 10 தினங்கள் தீபாவளி கொண்டாட்டமாக இருக்கும்.

Chennai book fair at island ground in Chennai

கோடிக்கணக்கான புத்தகங்களில் தங்கள் அறிவுப்பசிக்கு உகந்த புத்தகங்களை ஒரே இடத்தில் தேடி வாங்கிச்செல்வது அவர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை தரும். தமிழகம் முழுவதிலிருந்தும் வாசகர்கள் இந்த புத்தக திருவிழாவிற்கு திரண்டு வந்து புத்தகங்களை வாங்கி செல்வர். இந்த ஆண்டு புத்தக பிரியர்களுக்காக சுமார் 1 லட்சம் தலைப்புகளில் 1 கோடி புத்தகங்கள் இடம்பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

டிசம்பர் மாத வெள்ளம்

ஆண்டுதோறும் டிசம்பர் இறுதியில் அல்லது ஜனவரி மாதத்தின் முதல்வாரத்தில் துவங்கி 10 நாட்கள் நடைபெறும் புத்தக கண்காட்சி இந்த ஆண்டு சென்னை பெருவெள்ளத்தால் தள்ளிப்போனது.

39வது புத்தக கண்காட்சி

இந்த ஆண்து 39வது ஆண்டாக சென்னை புத்தக கண்காட்சி தீவுத்திடலில் இன்று தொடங்கியுள்ளது.
கண்காட்சியை தொழிலதிபர் நல்லி குப்புசாமி செட்டி தொடங்கி வைத்தார். 39-வது புத்தகக் காட்சியை ஒட்டி சிறப்பு தபால் உறை வெளியிடப்பட்டது. இதை சென்னை மண்டல அஞ்சல்துறை தலைவர் மெர்வின் அலெக்சாண்டர் வெளியிடுகிறார்.

புத்தக திருவிழா

இன்று துவங்கும் புத்தக கண்காட்சி 13ம் தேதி வரை நடைபெறுகிறது. வார நாட்களில் பிற்பகல் 2 மணி முதல் இரவு 9 மணி வரையிலும், விடுமுறை நாட்களில் முற்பகல் 11 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் இந்தக் கண்காட்சி நடைபெறவுள்ளது.

1 கோடி புத்தகங்கள்

இந்தக் கண்காட்சியில் சுமார் 1 லட்சம் தலைப்புகளில் 1 கோடி புத்தகங்கள் இடம்பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், வாசகர்களைக் கவர கலை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மாணவர்களுக்கு போட்டிகள்

மாணவர்களுக்கு கட்டுரைப்போட்டி, ஓவியப்போட்டி உள்ளிட்டவற்றை நடத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்தக் கண்காட்சியில் தமிழ், ஆங்கிலம், தெலுங்கு, உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் புத்தகங்கள் விற்பனைக்கு வைக்கப்பட உள்ளன.

குழந்தைகளுக்கு பயிற்சி

12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு அனுமதி இலவசம். மற்றவர்களுக்கு நுழைவுக்கட்டணம் ரூ.10. குழந்தைகளை மகிழ்விக்கும் வகையில் கட்டுரை, ஓவியம், குறும்படப் போட்டிகள் நடத்தப்படும். ஓவியப்பயிற்சி பட்டறையில் குழந்தைகளுக்கு ஓவியப் பயிற்சி அளிக்கப்படும். தினசரி குறும்படங்களும் வெளியிடப்படும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+