தமிழகம் முழுவதும் காங்கிரஸ் அலுவலகங்களுக்கு பாதுகாப்பு வழங்க உயர்நீதிமன்றம் உத்தரவு
சென்னை : தமிழகத்தில் உள்ள காங்கிரஸ் அலுவலகங்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி, ஜெயலலிதா சந்திப்பை சர்ச்சைக்குரிய விதத்தில் விமர்சித்ததையடுத்து, அ.தி.மு.க.வினர் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவரது உருவ பொம்மையும் எரிக்கப்பட்டு வருகிறது.

இதனைத்தொடர்ந்து, பா.ஜ.க. வினரும் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கு எதிராக போராட்டத்தில் குதித்துள்ளனர். இந்நிலையில், காங்கிரஸ் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவன் உள்ளிட்ட மாநிலம் முழுவதும் உள்ள காங்கிரஸ் அலுவலகங்களுக்கு போதிய பாதுகாப்பு மற்றும் ஆளுங்கட்சி போராட்டக்காரர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, வழக்கறிஞர் சூரியபிரகாசம் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்ற அவரது கோரிக்கையை நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் நிராகரித்தார்.
இதையடுத்து இந்த மனு நேற்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. அப்போது ஆஜரான அரசு தரப்பு வழக்கறிஞர், இது குறித்து காவல்துறையிடம் தகவல் பெற வேண்டும் என்பதால் வரும் திங்கட்கிழமை வரை அவகாசம் வேண்டும் என கோரினார்.
இதை ஏற்ற நீதிபதி, நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் காங்கிரஸ் அலுவலகங்களுக்கு திங்கட்கிழமை வரை இடைக்காலமாக பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று கூறி வழக்கின் விசாரணையை வரும் 25ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
-
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள் -
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கை, கால்களை வெட்டினால்தான் பயம் வரும்! பலாத்கார வழக்கில் கட் அண்ட் ரைட்டாக சொன்ன கர்நாடக ஹைகோர்ட் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications