சரணடைந்த நபரை நீதிமன்றத்துக்குள் புகுந்து கைது செய்வதா? தமிழக அரசுக்கு ஹைகோர்ட் கடும் கண்டனம்
சரணடைந்த நபரை நீதிமன்றத்துக்குள் புகுந்து போலீசார் கைது செய்ததற்கு சென்னை உயர்நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
Recommended Video

சென்னை: சரணடைந்த நபரை நீதிமன்றத்துக்குள் புகுந்து போலீசார் கைது செய்ததற்கு சென்னை உயர்நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த சந்தோஷ் என்பவர் கடந்த ஏப்ரல் மாதம் 10ஆம் தேதி திருப்பூல் நீதிமன்றத்தில் சரணடைந்தார்.
அப்போது சிங்காநல்லூர் போலீசார் நீதிமன்றத்திற்குள் நுழைந்து சந்தோஷை கைது செய்தனர். போலீஸின் இந்த நடவடிக்கை குறித்து திருப்பூர் பார் கவுன்சில் தலைமை நீதிபதிக்கு அறிக்கை அனுப்பியது.

கோர்ட்டுக்குள் எப்படி கைது செய்யலாம்?
அறிக்கையை படித்து பார்த்த உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி போலீஸின் செயலுக்கு கண்டனம் தெரிவித்தார். மேலும் நீதிமன்றத்தில் சரணடைந்தவரை எப்படி கைது செய்யலாம் என்றும் நீதிபதி இந்திரா பானர்ஜி போலீஸ்க்கு கேள்வி எழுப்பினார்.

விதிகளுக்கு எதிரானது
தமிழக போலீஸாரின் இந்த செயல் உச்சநீதிமன்ற விதிகளுக்கு எதிரானது என்றும் தலைமை நீதிபதி தெரிவித்தார். கோர்ட்டுக்குள் சென்று கைது செய்த போலீஸ் மீது அவமதிப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் எடுக்கவும் அவர் உத்தரவிட்டார்.

நாகரிகமான நாடா?
நீதிமன்ற அறைக்குள் நுழைந்து யாரையும் கைது செய்யக்கூடாது என்பது கூட காவலர்களுக்கு தெரியவில்லை என்றும் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி தெரிவித்தார். போலீசின் செயல் நாகரிகமான நாட்டில்தான் வாழ்கிறோமா என சந்தேகத்தை எழுப்புகிறது என்றும் அவர் கூறினார்.

முக்கிய பிரச்சனை
நீதிமன்ற அறைக்குள் சென்று யாரையும் கைது செய்யக் கூடாது என்ற அவர் நீதிமன்றத்திற்குள் கைது செய்யப்பட்டது முக்கிய பிரச்னையாக பார்க்கப்படுகிறது என்றார்.
-
அண்ணா நகர் சிறுமி வழக்கு.. தினமும் விசாரணை நடத்தி விரைந்து முடிக்க ஐகோர்ட் உத்தரவு! -
சென்னை.. தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கிய "ஏகே 47.." விசாரணையில், யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட் -
'மிஷன் இம்பாசிபிள்.. மெரினா டூ மடிப்பாக்கம்... பறக்கும் சென்னை.. தரம் தெரியாமல் மாறப்போகிறது! -
சென்னை தங்க பஸ்சில் நடந்த சம்பவம்.. கொஞ்சம் பொறுப்போட நடங்க! பயணிகளுக்கு நெட்டிசன்கள் அட்வைஸ் -
கௌதம் மேனனுக்கு எதிராக திரும்பிய வழக்கு.. ரூ4.25 கோடியை வட்டியுடன் செலுத்த ஐகோர்ட் உத்தரவு! -
இயக்குநர் ஷங்கர் சொத்து முடக்கப்பட்டதற்கு விதிக்கப்பட்ட தடை.. சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு! -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி












Click it and Unblock the Notifications