For Daily Alerts
Just In
ஜெயலலிதா மரணத்தை சந்தேக மரணம் என அறிவிக்க கோரிய மனு.. சென்னை ஹைகோர்ட் தள்ளுபடி
சென்னை: ஜெயலலிதா மரணத்தை சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்யக்கோரிய மனு தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும், எனவே அதை சந்தேக மரணம் என்று அறிவிக்க வேண்டும் என்றும், வழக்கறிஞர் வேலன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை இன்று ஹைகோர்ட் தள்ளுபடி செய்துள்ளது. ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் இதுகுறித்து விசாரித்து வருவதால், இந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. மேலும், 2 வாரத்திற்குள் விசாரணை ஆணையத்தை அணுகி முறையிட மனுதாரருக்கு உயர்நீதிமன்றம் அறிவுரை கூறியுள்ளது.
Comments
English summary
Chennai High Court has dismissed a petition which is request to announce Jayalalithaa's death as suspect death.
Story first published: Monday, January 22, 2018, 12:07 [IST]