சென்னை அருகே எண்ணெய் கசிவு: 2 வாரங்களில் ரூ.141 கோடி இழப்பீடு வழங்க ஹைகோர்ட் உத்தரவு!
சென்னை அருகே கப்பல்கள் மோதியதில் ஏற்பட்ட எண்ணெய் கசிவு தொடர்பாக 141 கோடி ரூபாய் இழப்பீட்டுத் தொகையை டெபாசிட் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை: எண்ணூர் துறைமுகம் அருகே இரண்டு கப்பல்கள் மோதிய விபத்தால் ஏற்பட்ட எண்ணெய் கசிவுக்கு 2 வாரத்தில் 141 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என சென்னை ஹைகோர்ட் உத்தவிட்டுள்ளது.
எண்ணுார் துறைமுக கடல் பகுதியில், 'எம்.டி.மாப்பில் - எம்.டி.டான் காஞ்சிபுரம்' ஆகிய இரண்டு கப்பல்கள் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் மோதி கொண்டன. இதில், டான் காஞ்சிபுரம் கப்பலில் இருந்த, எண்ணெய் கடலில் கசிந்தது.

இதனால் பாதிக்கப்பட்ட பகுதிகளில், கடல் வளம், மீன் மற்றும் கடலில் உள்ள பல்வேறு நுண்ணுயிரினங்கள் அழிந்தன. கடற்கரை ஓரங்களில் மிதந்த எண்ணெய் கசிவை அகற்றும் பணி பல நாட்கள் நடைபெற்றன.
இந்நிலையில் இதுகுறித்து தொடரப்பட்ட வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இதில் சென்னையில் கப்பல் மோதி எண்ணெய் கசிவால் ஏற்பட்ட பாதிப்புக்கான இழப்பீட்டு தொகை 141 கோடி ரூபாயை 14 நாட்களுக்குள் இரண்டு கப்பல்களும் தர வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்தது.
மேலும் அரசிடம் 21 நாட்களுக்குள் ரூ.84 கோடிக்கான வங்கி உத்திரவாதத்தையும் அளிக்க வேண்டும் என்றும் சென்னை ஹைகோர்ட் தெரிவித்துள்ளது. நிபந்தனையை நிறைவேற்றினால் கப்பல்களை துறைமுகத்திலிருந்து விடுவிக்கலாம் என்றும் ஹைகோர்ட் தெரிவித்துள்ளது. அரசு உரிய பரிசீலனைக்கு பின் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் சென்னை ஹைகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
-
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம்












Click it and Unblock the Notifications