சென்னை அருகே எண்ணெய் கசிவு: 2 வாரங்களில் ரூ.141 கோடி இழப்பீடு வழங்க ஹைகோர்ட் உத்தரவு!
சென்னை அருகே கப்பல்கள் மோதியதில் ஏற்பட்ட எண்ணெய் கசிவு தொடர்பாக 141 கோடி ரூபாய் இழப்பீட்டுத் தொகையை டெபாசிட் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை: எண்ணூர் துறைமுகம் அருகே இரண்டு கப்பல்கள் மோதிய விபத்தால் ஏற்பட்ட எண்ணெய் கசிவுக்கு 2 வாரத்தில் 141 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என சென்னை ஹைகோர்ட் உத்தவிட்டுள்ளது.
எண்ணுார் துறைமுக கடல் பகுதியில், 'எம்.டி.மாப்பில் - எம்.டி.டான் காஞ்சிபுரம்' ஆகிய இரண்டு கப்பல்கள் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் மோதி கொண்டன. இதில், டான் காஞ்சிபுரம் கப்பலில் இருந்த, எண்ணெய் கடலில் கசிந்தது.

இதனால் பாதிக்கப்பட்ட பகுதிகளில், கடல் வளம், மீன் மற்றும் கடலில் உள்ள பல்வேறு நுண்ணுயிரினங்கள் அழிந்தன. கடற்கரை ஓரங்களில் மிதந்த எண்ணெய் கசிவை அகற்றும் பணி பல நாட்கள் நடைபெற்றன.
இந்நிலையில் இதுகுறித்து தொடரப்பட்ட வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இதில் சென்னையில் கப்பல் மோதி எண்ணெய் கசிவால் ஏற்பட்ட பாதிப்புக்கான இழப்பீட்டு தொகை 141 கோடி ரூபாயை 14 நாட்களுக்குள் இரண்டு கப்பல்களும் தர வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்தது.
மேலும் அரசிடம் 21 நாட்களுக்குள் ரூ.84 கோடிக்கான வங்கி உத்திரவாதத்தையும் அளிக்க வேண்டும் என்றும் சென்னை ஹைகோர்ட் தெரிவித்துள்ளது. நிபந்தனையை நிறைவேற்றினால் கப்பல்களை துறைமுகத்திலிருந்து விடுவிக்கலாம் என்றும் ஹைகோர்ட் தெரிவித்துள்ளது. அரசு உரிய பரிசீலனைக்கு பின் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் சென்னை ஹைகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
-
சென்னை தங்க பஸ்சில் நடந்த சம்பவம்.. கொஞ்சம் பொறுப்போட நடங்க! பயணிகளுக்கு நெட்டிசன்கள் அட்வைஸ் -
Savukku Shankar: சவுக்கு சங்கர் நாளைக்குள் சரண் அடைய வேண்டும்.. இல்லையென்றால் கைது செய்யலாம்! ஐகோர்ட் அதிரடி -
அண்ணா நகர் சிறுமி வழக்கு.. தினமும் விசாரணை நடத்தி விரைந்து முடிக்க ஐகோர்ட் உத்தரவு! -
கௌதம் மேனனுக்கு எதிராக திரும்பிய வழக்கு.. ரூ4.25 கோடியை வட்டியுடன் செலுத்த ஐகோர்ட் உத்தரவு! -
இயக்குநர் ஷங்கர் சொத்து முடக்கப்பட்டதற்கு விதிக்கப்பட்ட தடை.. சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு! -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications