போலீசாருக்கு கட்டாய வாரவிடுப்பு.. தமிழக அரசுக்கு சென்னை ஹைகோர்ட் உத்தரவு!
போலீசாருக்கு கட்டாய வாரவிடுப்பு வழங்குவது குறித்து ஜூலை 19 ஆம் தேதிக்குள் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Subscribe to Oneindia Tamil
சென்னை: போலீசாருக்கு கட்டாய வாரவிடுப்பு வழங்குவது குறித்து ஜூலை 19 ஆம் தேதிக்குள் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
போலீசாருக்கு வார விடுமுறை அளிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது. இந்த வழக்கு நீதிபதி கிருபாகரன் முன்னிலையில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, போலீசார் வார விடுமுறை என்பது ஆவணங்களில் மட்டுமே உள்ளது. போலீசாரின் விடுப்பை நடைமுறைப்படுத்த வேண்டும்.
போலீசாரும் விடுமுறையை குடும்பத்தினருடன் செலவிட வேண்டும் என்றும் போலீசாருக்கு வார விடுமுறை என்பது அவசியம் என்றும் நீதிபதி கிருபாகரன் கூறினார்.
இதில் தமிழக அரசின் நிலைப்பாடு என்ன என்பதை ஜூலை 19 க்குள் பதில் அளிக்க வேண்டும் என நீதிபதி கிருபாகரன் உத்தரவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications