சின்னமலை- விமானநிலையம் மெட்ரோ ரயில் சேவை: கட்டணம் எவ்வளவு தெரியுமா?
சென்னை: விமானநிலையம் - சின்னமலை இடையேயான மெட்ரோ ரயில் சேவையை முதல்வர் ஜெயலலிதா இன்று தொடங்கி வைக்கிறார். விமானநிலையம், மீனம்பாக்கம், நங்கநல்லூர், கிண்டி மற்றும் சின்னமலை ரயில் நிலையங்கள் இன்று திறந்துவிடப்படுகின்றன. கோயம்பேட்டில் இருந்து விமான நிலையத்திற்கு ரூ.50 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. விமான நிலையத்தில் இருந்து சின்னமலை செல்ல 40 ரூபாய் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
சென்னை விமானநிலையம் - சின்னமலை இடையேயான மெட்ரோ ரயில் சேவையை தமிழக முதல்வர் ஜெயலலிதா தொடங்கி வைக்கிறார். இந்த நிகழ்ச்சியில் மத்திய நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடு, கப்பல் போக்குவரத்து துறை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் ஆகியோர் பங்கேற்கிறார்கள். அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கிறது.

ரயில் நிலையத்தில் மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருக்கிறது. இன்னும் சற்று நேரத்தில் இந்த மெட்ரோ ரயில் சேவை தொடங்கி வைக்கப்பட உள்ளது. தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி காட்சி மூலம் தொடங்கி வைக்க உள்ளார் ஜெயலலிதா.
கட்டணம் எவ்வளவு
கோயம்பேட்டில் இருந்து புறநகர் பேருந்து நிலையம் ரூ.10 அரும்பாக்கம், வடபழனிக்கு ரூ. 20 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அசோக்நகருக்கு ரூ. 30, ஈக்காட்டுத்தாங்கல், ஆலந்தூர், தோமையார்மலை, நங்கநல்லூருக்கு ரூ. 40 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. விமான நிலையத்தில் இருந்து சின்னமலை செல்ல 40 ரூபாய் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது
சென்னையில் மெட்ரோ ரயில் சேவை துவங்கப்பட்ட பின்பு, முதற்கட்டமாக கோயம்பேடு முதல் ஆலந்தூர் வரை மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்பட்டது. அந்த துவக்கத்தின் போது முக்கியமாக சொல்லப்பட்ட விஷயம் கட்டணம் அதிகளவில் இருப்பது. ஆலந்தூரில் இருந்து கோயம்பேடு செல்வதற்கு ரூ.40 வசூலிக்கப்படுகிறது. கோயம்பேட்டில் இருந்து விமான நிலையத்திற்கு ரூ. 50 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மெட்ரோ ரயில் சேவையை பொதுவாக மக்கள் உபயோகப்படுத்தாதற்கு முக்கிய காரணம் மாநகர பேருந்துகளில் செல்லும்போது ஆலந்தூரில் இருந்து கோயம்பேடு செல்வதற்கு ரூ.13 ஆகும். ஆனால் மெட்ரோவில் சென்றால் ரூ.40 வசூலிக்கப்படுகிறது. ஆகவே நடுத்தர மக்கள் மெட்ரோ ரயில் சேவையை பொதுவாக பயன்படுத்துவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications