பேருந்துகளை நிறுத்திய ஓட்டுநர்கள்.. சென்னையில் வெடித்த போராட்டம்! இன்று பேச்சுவார்த்தை நடத்தும் அரசு
சென்னை: தனியார் மூலம் அரசு பேருந்துகளுக்கு ஓட்டுநர்களை நியமிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஓட்டுநர்கள் நேற்று பேருந்துகளை நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் இன்று தொழிற்சங்கங்களுடன் அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
சென்னையில் MTC எனப்படும் மாநகர போக்குவரத்து கழகத்தின் கீழ் 1,559 சாதாரண கட்டண பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. அதேபோல், 1,304 சொகுசு பேருந்துகள் மற்றும் ஏசி பேருந்துகளும் இயங்கி வருகின்றன. இந்த நிலையில் உலக வங்கியிடம் நிதி உதவி பெற்று இந்த ஆண்டு 1000 மின்சார பேருந்துகளை வாங்கும் முயற்சியில் போக்குவரத்துத்துறை இறங்கி இருக்கிறது.

எரிபொருள் செலவை குறைக்கும் வகையில் இந்த நடவடிக்கையை போக்குவரத்துத் துறை மேற்கொள்ள உள்ளது. அதே சமயம் இந்த புதிய பேருந்துகளை தனியார் மூலம் இயக்குவது தொடர்பாகவும் அரசு ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது. இதில் பல்வேறு தொழிற்சங்கங்கள் மத்தியில் எதிர்ப்பு நிலவி வருகிறது.
இந்த திட்டத்தின் காரணமாக அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் எந்த வகையிலும் பாதிக்கப்பட மாட்டார்கள் என்று போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்து உள்ளார். இந்த நிலையில் ஒப்பந்த அடிப்படையில் போக்குவரத்து துறையில் ஊழியர்களை நியமிக்க அரசு பேருந்து கழகம் முடிவு செய்துவிட்டதாக தகவல் வேகமாக பரவியது.
இதனை அறிந்து ஆத்திரமடைந்த சென்னை மாநகர பேருந்து ஓட்டுநர்கள் திடீரென ஆங்காங்கே பேருந்துகளை நிறுத்தி போராட்டத்தில் ஈடுபடத் தொடங்கினர். இதன் காரணமாக சென்னையில் பேருந்து பயணிகள் கடும் அவதிக்கு ஆளாகினர். நடு சாலையிலும், பேருந்து நிலையங்களிலும் மக்கள் பேருந்துகள் இயக்கப்படாததால் நீண்ட நேரம் காத்திருந்தனர்.

போக்குவரத்து தொழிற்சங்கங்களின் முன் அறிவிப்பு இன்றி பேருந்து ஓட்டுநர்கள் தன்னிச்சையாக நடத்திய இந்த போராட்டத்தால் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக பொதுமக்கள் பாதிக்கப்பட்டார்கள். இதனை தொடர்ந்து போக்குவரத்து தொழிற்சங்கத்தினரின் கோரிக்கைகளை ஏற்று ஓட்டுநர்கள் மீண்டும் பேருந்துகளை இயக்க தொடங்கியதால் போக்குவரத்து சீரானது.
அரசு அரசு பேருந்து ஓட்டுநர்களின் போராட்டம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இன்று போக்குவரத்து தொழிற்சங்கங்களுடன் போக்குவரத்துத் துறை அதிகாரிகள் மற்றும் தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை மேற்கொள்ள உள்ளார்கள். சென்னை டி.எம்.எஸ் வளாகத்தில் நடைபெறும் இந்த பேச்சுவார்த்தையில், தொமுச, சிஐடியு, அண்ணா தொழிற்சங்கம் உள்ளிட்ட அமைப்புகள் பங்கேற்கும் என்று கூறப்படுகிறது.
-
சென்னை மாணவி தடா அருவிக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
Gold Price: மீண்டும் ஷாக் கொடுத்த தங்கம் விலை.. ஒரே நாளில் அதிரடி உயர்வு.. நகை பிரியர்கள் கலக்கம்! -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்!












Click it and Unblock the Notifications