தேனாம்பேட்டை காவல்நிலையம் குண்டுவீசியது யார்? மர்மநபர் படம் வெளியீடு!
சென்னை தேனாம்பேட்டை காவல்நிலையம் மீது பெட்ரோல் குண்டுவீசியவரின் புகைப்படத்தை போலீசார் வெளியிட்டுள்ளனர்.
சென்னை : சென்னைத் தேனாம்பேட்டை காவல்நிலையம் மீது பெட்ரோல் குண்டு வீசியவரை கண்டுபிடிக்க விடிய விடிய 50 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர்.
சென்னை அண்ணாசாலையில் காமராஜர் அரங்கம் அருகே அமைந்துள்ள தேனாம்பேட்டை காவல்நிலையத்தின் மீது நேற்று அதிகாலை 4 மணியளவில் 3 பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டன. போலீஸ் நிலைய பெயர்பலகை மீது வீசப்பட்ட பெட்ரோல் குண்டு வெடித்து தீப்பிடித்தது.
வெடிகுண்டு வீசிவிட்டு 4 மர்மநபர்கள் 2 மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்றுள்ளனர். சென்னை நகரில் உள்ள போலீஸ் நிலையத்தின் மீதே மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டை வீசிவிட்டு சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

பாதுகாப்பு இல்லை
மேலும் காவல்துறையினருக்கே தலைநகரில் பாதுகாப்பு இல்லை என்று இந்த சம்பவம் பல விமர்சனங்களையும் எழுப்பியது. இந்நிலையில் தேனாம்பேட்டை போலீஸ் நிலையத்தில் பொருத்தப்பட்டுள்ள 3 கண்காணிப்பு கேமராக்களில் இரண்டு கேமராக்களில் குண்டு வீசியர்வகிள் உருவம் தெளிவில்லாமல் பதிவாளியுள்ளது.

புகைப்படம் வெளியீடு
மற்றொரு கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ள நபர் ஒருவரின் புகைப்படத்தை போலீசார் வெளியிட்டுள்ளனர். இந்த புகைப்படத்தில் உள்ளவரைக் கண்டறியும் அடிப்படையில் விசாரணை நடத்தப்படுகிறது. மேலும் இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

50 பேரிடம் விசாரணை
இதனிடையே குற்றவாளிகள் பற்றி துப்பு கிடைக்காமல் திணறி வருகின்றனர் போலீசார். நேற்று இரவு முதல் சுமார் 50 பேரிடம் விசாரணை நடத்தப்பட்ட போதும் பெட்ரோல் குண்டு தாக்குதல் குறித்து எந்த துப்பும் போலீசாருக்கு கிடைக்கவில்லை.

விசாரணை போக்கு மாற்றம்
பெட்ரோல் குண்டுகளை வீசியவர்கள் யார்? எதற்காக வீசினார்கள்? என்பது தெரியாத நிலையில் போலீசார் விசாரணையின் போக்கை மாற்றியுள்ளனர். தேனாம்பேட்டை பகுதிக்கு அருகில் வசிக்கும் குடியிருப்பு வாசிகளிடம் தற்போது விசாரணையைத் தொடங்கியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications