பால், கேஸ், மருந்து கூட கிடைக்கவில்லை.. மழை விட்டும் தனித்தீவான சென்னை மடிப்பாக்கம்!
சென்னை மடிப்பாக்கம் பகுதியில் மழையால் தேங்கிய நீர் வடியாததால் சுமார் 500 குடும்ப மக்கள் அத்தியாவசியப் பொருட்கள் கிடைக்காமல் அல்லல்படுவதாக தெரிவித்துள்ளனர்.
சென்னை: வடகிழக்குப் பருவமழை காரணமாக கடந்த 3 நாட்கள் பெய்த மழையால் மடிப்பாக்கம் எல்ஐசி நகர் பகுதியில் சுமார் 500 குடும்ப மக்கள் அத்தியாவசியப் பொருட்கள் கூட கிடைக்காமல் அல்லல்படுவதாக கூறியுள்ளனர்.
வடகிழக்குப் பருவமழை வலுவடைந்துள்ளதால் சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் கனமழை பெய்தது. அக்டோபர் 29, 30 ஆகிய தேதிகளில் பெய்த கனமழையே சென்னையின் புறநகர்ப் பகுதியை தத்தளிக்க வைத்தது. அந்த நீரை வெளியேற்ற அரசு நடவடிக்கை எடுக்காததால் மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டனர். இந்நிலையில் நேற்று முழுவதும் பெய்த மழையால் வீடுகளை சூழ்ந்துள்ள மழை நீர் ஓட வழியின்றி குடியிருப்புகளை சுற்றி அதிக அளவில் தேங்கியுள்ளது.

மடிப்பாக்கம் எல்ஐசி நகர்ப்பகுதியில் சுமார் 500 குடியிருப்புகள் உள்ளன. இந்தப் பகுதியில் மழை நீர் தொடர்ந்து சூழ்ந்திருப்பதால் இந்த 500 குடும்பங்களும் தனித்து விடப்பட்டது போல ஆகியுள்ளது. வெள்ள நீர் வடியாததால் வீடுகளுக்கு பால், தண்ணீர் மற்றும் கேஸ் விநியோகம் செய்ய ஆட்களே வருவதில்லை என்ற அந்தப் பகுதி மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
தண்ணீர் சூழ்ந்திருப்பதால் வயதில் முதிர்ந்தவர்களுக்கான மருந்து மாத்திரைகள் கூட கொண்டு வந்து விநியோகிக்க கூட தயக்கம் காட்டுவதால் கடுமையான பாதிப்புகளை சந்தித்துள்ளதாகக் கூறுகின்றனர் மக்கள். மேலும் வீட்டில் இருந்து வெளியே செல்ல கேப் புக் செய்தால் கூட அவை தண்ணீர் சூழ்ந்திருப்பதை காரணம் காட்டி கேன்சல் செய்யப்பட்டுவிடுவதாக மக்கள் கூறுகின்றனர்.
மநாகராட்சி அதிகாரிகளிடம் தொடர்ந்து புகார் அளித்தும் மழை நீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்காததால் மிகுந்த பாதிப்புகளை சந்தித்துள்ளதாக மக்கள் கூறுகின்றனர். மழை நீரை வெளியேற்றுவது குறித்து பெருங்குடி மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில் இந்தப் பகுதிக்கு அருகில் இருக்கும் நாராயணபுரம் ஏரியில் நிரம்பிய மழை நீர் வெளியேற்றப்பட்டு விட்டதால் இன்றைக்குள் இந்தப் பகுதியில் சூழ்ந்திருக்கும் மழை நீர் வடிந்துவிடும் என்று கூறியுள்ளனர்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications