Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மாறன் சகோதரர்கள் மீதான பிஎஸ்என்எல் வழக்கு விசாரணை.. ஜன.8க்கு ஒத்திவைப்பு!

மாறன் சகோதரர்கள் மீதான பிஎஸ்என்எல் வழக்கு விசாரணை ஜன.8க்கு ஒத்திவைக்கப்பட்டு இருக்கிறது.

Subscribe to Oneindia Tamil

சென்னை: மாறன் சகோதரர்கள் மீதான பிஎஸ்என்எல் வழக்கு விசாரணை ஜன.8க்கு ஒத்திவைக்கப்பட்டு இருக்கிறது. சிபிஐ தரப்பில் பதில் அளிக்க அவகாசம் கோரியதால் சென்னை சிபிஐ நீதிமன்றம் விசாரணையை ஒத்தி வைத்தது.

சன் குழுமத்திற்காக பிஎஸ்என்எல்லின் அதிவேக இணைப்பை முறைகேடாக பயன்படுத்தியதாக மாறன் சகோதரர்கள் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. இந்த வழக்கு சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து கொண்டு இருக்கிறது.

Chennai special court postponed BSNL case against Maran to Jan.8

இந்த வழக்கில் இருந்து விடுவிக்க கோரி மாறன் சகோதரர்கள் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து இருந்தனர்.
சிபிஐ சிறப்பு நீதிமன்றம் இதுகுறித்து பதில் அளிக்கும்படி சிபிஐயிடம் உத்தரவு பிறப்பித்து இருந்தது.

தற்போது இந்த வழக்கில் பதில் அளிக்க சிபிஐ தரப்பில் அவகாசம் கேட்கப்பட்டு இருக்கிறது. இதனால் வழக்கு விசாரணை ஜன.8க்கு ஒத்திவைக்கப்பட்டு உள்ளது.

சென்னை சிபிஐ நீதிமன்றத்தில் மாறன் சகோதரர்கள் இன்று வழக்கு விசாரணைக்கு ஆஜராகவில்லை. சென்ற வழக்கு விசாரணையின் போதும் மாறன் தரப்பு ஆஜராகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+