சென்னை பெண் என்ஜினியர் கொலையாளிகள் இருவருக்கு 7 நாட்கள் போலீஸ் கஸ்டடி

சென்னை: சென்னை சிறுசேரியில் பெண் என்ஜினியர் உமாமகேஸ்வரியை பலாத்காரம் செய்து கொன்ற வழக்கில் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்ட இருவரிடம் 7 நாட்கள் விசாரணை நடத்த சிபிசிஐடி போலீசாருக்கு செங்கல்பட்டு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
சென்னையை அடுத்த சிறுசேரியில் டி.சி.எஸ். நிறுவனத்தில் பணியாற்றி வந்த என்ஜினியர் உமா மகேஸ்வரி கடந்த 13ந் தேதி காணாமல் போனார். பின்னர் 22-ந் தேதி சிறுசேரி சிப்காட் வளாகத்தில் அவர் அழுகிய நிலையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார். உமா மகேஸ்வரி பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.
இது தொடர்பாக முதலில் சென்னையில் நேற்று முன்தினம் 2 பேர் கைது செய்யப்பட்டனர். பின்னர் அடுத்தடுத்த விசாரணைகளில் கொல்கத்தாவில் வைத்து 4 பேர் கைது செய்யப்பட்டனர். மொத்தம் இந்த வழக்கில் 6 பேர் பிடிபட்டுள்ளனர்.
சென்னையில் கைது செய்யப்பட்ட இருவரும் செங்கல்பட்டு நீதிமன்றத்தில் நேற்று ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது அவர்கள் இருவரையும் வரும் 12-ந் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். ஆனால் சிபிசிஐடி போலீசார் சார்பில் அவர்களிடம் விசாரணை நடத்த அனுமதி கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது.
இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதி அவர்கள் இருவரிடம் 7 நாட்கள் விசாரணை நடத்த அனுமதி அளித்து உத்தரவிட்டனர்.












Click it and Unblock the Notifications