சென்னை.. இன்று காந்தி நினைவு தினம்... நேற்று ஆர்எஸ்எஸ் பேரணி.. மெரீனாவில் 144!
இன்று மகாத்மா காந்தி நினைவு தினம் அனுசரிக்கப்படும் நிலையில் நேற்று ஆர்எஸ்எஸ் அமைப்பு சென்னையில் பேரணி நடத்தியது.
சென்னை: சென்னை மாநகரம் தொடர்ந்து பரபரப்பாகவே உள்ளது. மெரீனா கடற்கரையில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் நேற்று ஆர்.எஸ்.எஸ். அமைப்பு 15 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னையில் ஒரு பேரணியை நடத்தியது. இன்று மகாத்மா காந்தி நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது.
ஜல்லிக்கட்டுப் புரட்சிப் போராட்டம் மிகப் பெரும் எழுச்சியை தமிழக மக்கள் மத்தியில் ஏற்படுத்திய நிலையில் சென்னை தொடர்ந்து பரபரப்பாகவே காணப்படுகிறது.

புரட்சிக் களமான மெரீனா கடற்கரை காவல்துறையின் முழுக் கட்டுப்பாட்டில் உள்ளது. அங்கு கூட்டம் போடவோ, ஆர்ப்பாட்டம் செய்யவோ, பேரணி நடத்தவோ அனுமதி கிடையாது. பிப்ரவரி 12ம் தேதி வரை 144 தடை உத்தரவை காவல்துறை விதித்துள்ளது.
இந்த நிலையில் நேற்று இன்னொரு முக்கிய நிகழ்வை சென்னை கண்டது. அதுதான் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் பேரணியாகும். கிட்டத்தட்ட 15 ஆண்டுகளுக்குப் பிறகு ஆர்எஸ்எஸ் அமைப்பு சென்னையில் பேரணி நடத்தியது. பலத்த போலீஸ் பாதுகாப்புடன் இந்தப் பேரணியை ஆர்எஸ்எஸ் அமைப்பினர் நடத்தினர்.
காக்கி பேன்ட் மற்றும் வெள்ளைச் சட்டையில் ஆர்எஸ்எஸ் அமைப்பினர் எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்திலிருந்து எழும்பூர் ரயில் நிலையம் வரை ஊர்வலமாகப் போய் மீண்டும் தொடங்கிய இடத்திற்கே வந்து சேர்ந்தனர். ராமானுஜர், குருகோவிந்த் சிங், அம்பேத்கர், நேதாஜி ஆகிய தலைவர்களை நினைவு கூறும் வகையில் இந்நிகழ்ச்சி நடத்தப்பட்டதாம். தமிழிசை சவுந்தரராஜன், வானதி சீனிவாசன் உள்ளிட்ட பாஜக தலைவர்களும் இதில் கலந்து கொண்டனர்.
இன்று இன்னொரு முக்கிய நிகழ்வை சென்னை காண்கிறது. சென்னை மட்டுமல்ல ஒட்டுமொத்த தேசத்துக்கும் இன்று முக்கியமான நாள். தேசப் பிதா என்று போற்றப்படும் மகாத்மா காந்தி, நாதுராம் கோட்சேவால் படுகொலை செய்யப்பட்ட நாள் இன்று. ஆர்எஸ்எஸ், இந்து மகாசபா போன்ற இந்துத்துவா அமைப்புகளில் தீவிரமாக செயல்பட்டு வந்தவர் கோட்சே. அவரால் மகாத்மா காந்தி சுட்டுக் கொல்லப்பட்ட தினம் இது.
நினைவு கூர்வோம்!
-
சென்னை தங்க பஸ்சில் நடந்த சம்பவம்.. கொஞ்சம் பொறுப்போட நடங்க! பயணிகளுக்கு நெட்டிசன்கள் அட்வைஸ் -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு?












Click it and Unblock the Notifications