சென்னை.. இன்று காந்தி நினைவு தினம்... நேற்று ஆர்எஸ்எஸ் பேரணி.. மெரீனாவில் 144!
இன்று மகாத்மா காந்தி நினைவு தினம் அனுசரிக்கப்படும் நிலையில் நேற்று ஆர்எஸ்எஸ் அமைப்பு சென்னையில் பேரணி நடத்தியது.
சென்னை: சென்னை மாநகரம் தொடர்ந்து பரபரப்பாகவே உள்ளது. மெரீனா கடற்கரையில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் நேற்று ஆர்.எஸ்.எஸ். அமைப்பு 15 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னையில் ஒரு பேரணியை நடத்தியது. இன்று மகாத்மா காந்தி நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது.
ஜல்லிக்கட்டுப் புரட்சிப் போராட்டம் மிகப் பெரும் எழுச்சியை தமிழக மக்கள் மத்தியில் ஏற்படுத்திய நிலையில் சென்னை தொடர்ந்து பரபரப்பாகவே காணப்படுகிறது.

புரட்சிக் களமான மெரீனா கடற்கரை காவல்துறையின் முழுக் கட்டுப்பாட்டில் உள்ளது. அங்கு கூட்டம் போடவோ, ஆர்ப்பாட்டம் செய்யவோ, பேரணி நடத்தவோ அனுமதி கிடையாது. பிப்ரவரி 12ம் தேதி வரை 144 தடை உத்தரவை காவல்துறை விதித்துள்ளது.
இந்த நிலையில் நேற்று இன்னொரு முக்கிய நிகழ்வை சென்னை கண்டது. அதுதான் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் பேரணியாகும். கிட்டத்தட்ட 15 ஆண்டுகளுக்குப் பிறகு ஆர்எஸ்எஸ் அமைப்பு சென்னையில் பேரணி நடத்தியது. பலத்த போலீஸ் பாதுகாப்புடன் இந்தப் பேரணியை ஆர்எஸ்எஸ் அமைப்பினர் நடத்தினர்.
காக்கி பேன்ட் மற்றும் வெள்ளைச் சட்டையில் ஆர்எஸ்எஸ் அமைப்பினர் எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்திலிருந்து எழும்பூர் ரயில் நிலையம் வரை ஊர்வலமாகப் போய் மீண்டும் தொடங்கிய இடத்திற்கே வந்து சேர்ந்தனர். ராமானுஜர், குருகோவிந்த் சிங், அம்பேத்கர், நேதாஜி ஆகிய தலைவர்களை நினைவு கூறும் வகையில் இந்நிகழ்ச்சி நடத்தப்பட்டதாம். தமிழிசை சவுந்தரராஜன், வானதி சீனிவாசன் உள்ளிட்ட பாஜக தலைவர்களும் இதில் கலந்து கொண்டனர்.
இன்று இன்னொரு முக்கிய நிகழ்வை சென்னை காண்கிறது. சென்னை மட்டுமல்ல ஒட்டுமொத்த தேசத்துக்கும் இன்று முக்கியமான நாள். தேசப் பிதா என்று போற்றப்படும் மகாத்மா காந்தி, நாதுராம் கோட்சேவால் படுகொலை செய்யப்பட்ட நாள் இன்று. ஆர்எஸ்எஸ், இந்து மகாசபா போன்ற இந்துத்துவா அமைப்புகளில் தீவிரமாக செயல்பட்டு வந்தவர் கோட்சே. அவரால் மகாத்மா காந்தி சுட்டுக் கொல்லப்பட்ட தினம் இது.
நினைவு கூர்வோம்!
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications