For Daily Alerts
Just In
நான் மன்னிப்பு கேட்டுக்கறேன், காயத்ரியை தப்பா பேசாதீங்க.. தாயார் வருத்தம்!
காயத்ரி ரகுராம் தவறாக பேசியிருந்தால், அதற்காக நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் என்று அவரது தாய் கிரிஜா ரகுராம் கூறியுள்ளார்,
சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சியில் சேரி பிஹேவியர் என்று பேசிய காயத்ரியின் பேச்சிற்கு தாய் கிரிஜா ரகுராம் வருத்தம் தெரிவித்துள்ளார்.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் நடிகை ஓவியாவை, காயத்ரி ரகுராம் சேரி பிஹேவியர் என்று இழிவாக பேசினார். அந்தக் காட்சி பிரமோவாக ஒளிப்பரப்பானது.
இதற்கு கடும் கண்டனம் சமூக ஆர்வலர்கள் மத்தியில் எழுந்தது. தலித் சமூகத்தை இழிவாக பேசிய காயத்ரி மீது வழக்கு தொடர வேண்டும் என்ற கோரிக்கை வலுவாக எழுந்தது..
இந்நிலையில், இன்று அவரது தாய் கிரிஜா ரகுராம், சேரி தொடர்பான காயத்ரி பேசிய வார்த்தைகள் மக்களை பாதித்திருந்தால் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார். மேலும், காயத்ரியை யாரும் கேவலப்படுத்த வேண்டாம் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
Comments
English summary
Girija Raghuram, who is mother of Gayatri Raghuram apologized for her doughter's Cherry Behavior talk.
Story first published: Thursday, July 13, 2017, 15:40 [IST]