தொடரும் குழந்தை கடத்தல்.. போராடும் அமைப்புகள்.. சென்னை உயர்நீதிமன்றம் அதிருப்தி
குழந்தை கடத்தலுக்கு எதிராக நடந்து வரும் வழக்கில், சென்னை உயர்நீதிமன்றம் சாட்டையை சுழற்றி உள்ளது.
சென்னை: குழந்தை கடத்தலுக்கு எதிராக நடந்து வரும் வழக்கில், சென்னை உயர்நீதிமன்றம் சாட்டையை சுழற்றி உள்ளது. இதில் எக்ஸ்னோரா அமைப்பும், வழக்கு தொடுத்தவர்களும் முக்கியமான ஆதாரங்களை சமர்ப்பித்துள்ளனர்.
இந்த வழக்கு குறித்து தற்போது எக்ஸ்னோரா அமைப்பின் கிருஷ்ணகுமார் பேட்டியளித்துள்ளார். அதில் 8 மாத மற்றும் 9 மாத குழந்தை ரோஷன் மற்றும் சரண்யா என்ற இரண்டு குழந்தைகள் கடந்த 2016ல் கடத்தப்பட்டனர். இவர்கள் காணாமல் போய் இரண்டரை வருடம் ஆகிறது. இதற்காக நாங்கள் அப்போதே போலீசில் புகார் அளித்தோம். அப்போதைய சென்னை சிட்டி கமிஷன் ராஜேந்திர பிரசாத்திடம் புகார் அளித்தோம்.

அதேபோல் குழந்தைகளை மீட்க வேண்டுமென நடிகர் பார்த்திபன், எக்ஸ்னோரா நிர்மல், லதா ரஜினிகாந்த் ஆகியோர் காவல் ஆணையரிடம் புகார் அளித்தனர். அதன்பின் நிர்மல் கொடுத்த ஊக்கத்தின் மூலம், எக்ஸ்னோரா மூலம், ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தோம்.
ஆனால் அதன்பிறகுதான், இதில் பெரிய பிரச்சனை இருப்பது தெரிந்தது. ஆயிரக்கணக்கில் குழந்தைகள் காணாமல் போவது தெரிய வந்துள்ளது. லட்சக்கணக்கில் தமிழகத்தில் குழந்தைகள் காணாமல் போய் இருக்கிறார்கள்.
நீதிபதிகள் நாகமுத்து, பாரதிதாசன் இந்த வழக்கை விசாரித்தனர். தமிழகத்தில் அப்போது சிலை கடத்தல் தடுப்பு பிரிவு இருந்தது, ஆனால் குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவு இல்லை. இதனால் அதற்கு தனி பிரிவு உருவாக்க கோரினோம். அதன்பின்தான் குழந்தைகளுக்காக தனி கடத்தல் பிரிவு உருவாக்கப்பட்டது.
அதன்பின் இந்த வழக்கு நேற்று நீதிபதிகள் சத்யநாராயணன், சேஷசாயி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்த போது குழந்தை கடத்தல் குறித்த அறிக்கை தாக்கல் செய்ய அரசு தரப்பில் கூடுதல் அவகாசம் கோரப்பட்டது.
இதற்கு கடும் கண்டனம் தெரிவித்த நீதிபதிகள், குழந்தைகள் கடத்தலை தடுக்க தமிழக அரசு தவறிவிட்டதாக வேதனை தெரிவித்தனர். மேலும் எக்ஸ்னோரே அமைப்பு சார்பில் குஜராத்திற்கு தமிழக குழந்தைகள் கடத்தப்பட்டிருப்பதாக மனுதாரர் தரப்பில் அறிக்கையும் தாக்கல் செய்யப்பட்டது.
குஜராத்தில் 350 குழந்தைகள் பிச்சை எடுக்கிறார்கள், அதில் 6 தமிழ் குழந்தைங்கள் பற்றி சிபிஐயிடம் அறிக்கை அளித்துள்ளோம். அதேபோல் தற்போது குஜராத்தில் குழந்தை கடத்தல் கும்பல் ஒன்று கைது செய்யப்பட்டது.
இந்த நிலையில்தான் செப்டம்பர் 24ஆம் தேதியன்று குழந்தை கடத்தலை தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து விசாரிக்கும்படி நீதிபதிகள் கூறியுள்ளனர். அதில் தமிழக உள்துறை மற்றும் சமூக நலத்துறை செயலாளர்கள் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டனர், என்றுள்ளார்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications