திறந்த ஜீப்பில் ஓபிஎஸ், ஈபிஎஸ் பிரச்சாரம்... ஆர்கே நகரில் தாரை தப்பட்டைகளோடு அதகளம்!
அதிமுக வேட்பாளர் மதுசூதனனுக்கு ஆதரவாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி,துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
சென்னை : அதிமுக வேட்பளார் மதுசூதனனுக்கு ஆதரவாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் இருவரும் ஆர்கே நகர் இடைத்தேர்தல் களத்தில் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ஆர்கே நகர் இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. ஒருபுறம் அதிமுகவின் கோட்டையான ஆர்கே நகரை கைவிட்டால் அது இனி வரும் தேர்தல்களுக்கு எடுத்துக்காட்டாகி விடும். மற்றொரு புறம் இரட்டை இலை சின்னம் கிடைத்த வெற்றியோடு போட்டியிடுவதால் அதற்கான மதிப்பை தக்கவைத்துக் கொள்ள வேண்டிய கட்டாயம் என்று அதிமுகவிற்கு இந்த தேர்தல் பலமுனை நெருக்கடிகளைத் தந்துள்ளது.
இடைத்தேர்தல் என்றாலே ஆளும் கட்சி வேட்பாளர் தான் வெற்றி பெறுவார் என்பது எழுதப்படாத அரசியல் விதியாக இருக்கிறது. ஆனால் ஆர்கே நகர் இடைத்தேர்தலை அப்படி கணிக்க முடியாத சூழல் இருக்கிறது.

யாருக்கு வெற்றி?
ஏனெனில் அதிமுகவில் ஏற்பட்ட பிளவுகள், இணைப்புகளும் இதற்கு ஒரு காரணம். மற்றும் ஜெயலலிதா, கருணாநிதி என்ற இரண்டு மாபெரும் தலைவர்கள் இல்லாத தேர்தல் என்பதால் இடைத்தேர்தலில் எந்த கட்சி வெற்றி பெறப்போகிறது என்று கணிக்க முடியாத நிலையிலேயே இருக்கிறது.

தினகரன பிரச்சாரம் இல்லை
திமுக, அதிமுக, நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் ஆர்கே நகர் தேர்தல் களத்தில் பிரச்சாரம் செய்து வருகின்றனர். ஆனால் சசிகலா அணியைச் சேர்ந்த தினகரனுக்கு மட்டும் ஆர்கே நகரில் பிரச்சாரம் செய்ய காவல்துறையினர் அனுமதி மறுக்கின்றனர். இது குறித்து தினகரன் தரப்பினர் தமிழக தேர்தல் அதிகாரி ராஜேஷ் லகானியிடம் முறையிட்டுள்ளனர்.

உற்சாக வரவேற்பு
இந்நிலையில் இன்று காலையில் கொருக்குப்பேட்டையில் உள்ள கோயிலில் முதல்வர், துணை முதல்வர் சாமி கும்பிட்டுவிட்டு பிரச்சாரத்தை தொடங்கியுள்ளனர். இரட்டைக் குழல் துப்பாக்கிகள் பிரச்சாரத்தையொட்டி ஆர்கே நகரில் கரகாட்டம், தப்பாட்டம் என்று வரவேற்புகள் தடபுடலாக இருந்தது.

ஜெ செய்த நல்லவற்றை சொல்லி வாக்கு சேகரிப்பு
வழக்கமாக பச்சை நிற சேலையில் வரும் அதிமுக மகளிரணியினர் இன்று கேரள பாரம்பரிய சேலையில் வந்து கலச கும்பங்களை ஏந்தி நின்றனர். அதிமுகவின் அருமை பெருமைகளையும், ஜெயலலிதா இந்த தொகுதி மக்களுக்கு செய்த விஷயங்களையும் கூறி முதல்வரும், துணை முதல்வரும் வாக்கு சேகரித்து வருகின்றனர்.
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications