எனது தலைமையிலான ஆட்சியை யாராலும் கலைக்க முடியாது.. சேலத்தில் சீறிய பழனிசாமி!
எனது தலைமையிலான ஆட்சியை யாராலும் கலைக்க முடியாது என்று சேலத்தில் நடைபெற்ற எம்ஜிஆர் நூற்றாண்டு பொதுக்கூட்டத்தில் முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
சேலம்: எனது தலைமையிலான ஆட்சியை யாராலும் கலைக்க முடியாது என்று சேலத்தில் நடைபெற்ற எம்ஜிஆர் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டத்தில் முதல்வர் பழனிசாமி பேசியுள்ளார்.
தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 18 பேர் தகுதிநீக்கம் செய்யப்பட்ட நிலையில், இன்று காலை சேலத்தில் நடைபெற்ற எம்ஜிஅஆர் நூற்றாண்டு விழா பொதுக் கூட்டத்தில் முதல்வர் பழனிசாமி பேசியதாவது : நான் என்றுமே முதல்வர் கிடையாது, கட்சிக்கு எப்போதும் நிரந்தர பொதுச்செயலாளரும், நிரந்த முதல்வரும் ஜெயலலிதாவும் தான். அவர் விட்டுச் சென்ற பணியைத் தான் நான் செய்து வருகிறேன்.
கட்சியின் இரு அணிகள் இணைந்த பிறகு கட்சியின் பொதுக்குழுவால் தேர்வு செய்யப்பட்டு நானும், ஓ.பன்னீர்செல்வமும் செயல்பட்டு வருகிறோம். அதிமுகவின் தொண்டர்களும், நிர்வாகிகளும் உடன் இருந்து எப்போதும் கட்சியும் ஆட்சியும் சிறப்பாக அமைய ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
எம்ஜிஆர், ஜெயலலிதாவின் கனவை நினைவாக்கும் வகையில் தொடர்ந்து எதிரிகளை வீழ்த்தி அதிமுகவின் சாதனையைத் தொடருவோம். உள்ளாட்சித் தேர்தல் வரஉள்ள அதற்குத் தயாராக இருங்கள். எதிரிகள் யாராக இருந்தாலும் அவர்களை வீழ்த்தி அதிமுக ஆட்சியை தொடர்வோம் என உறுதியேற்போம், என்றும் தெரிவித்தார்.