மகளிர் உரிமைத் தொகையை பெற மீண்டும் விண்ணப்பிக்கலாம்.. முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு!
தர்மபுரி: தமிழ்நாட்டில் விடுபட்ட தகுதியுள்ள பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை கண்டிப்பாக வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் உறுதி கொடுத்துள்ளார். 1.30 கோடி பெண்கள் ரூ.1,000 உரிமைத் தொகை வழங்கப்படுவதாக கூறிய ஸ்டாலின், விடுபட்ட மகளிர் மீண்டும் உரிமைத் தொகை கோரி விண்ணப்பிக்கலாம் என்றும் கூறியுள்ளார்.
தமிழ்நாட்டில் டிசம்பர் 12ஆம் தேதி மகளிர் உரிமைத் தொகை திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டது. மகளிர் உரிமைத் தொகுதி திட்டத்தில் விடுபட்ட சுமார் 17 லட்சம் மகளிருக்கு உரிமைத் தொகை அளிக்கப்பட்டது. இதன் மூலமாக தமிழ்நாட்டில் 1.30 லட்சம் பெண்கள் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் மூலமாக பயனடைந்து வருகின்றனர்.

அதேபோல் மகளிருக்கான திட்டங்களை கொண்டாடும் வகையில் வெல்லும் தமிழ்ப் பெண்கள் என்ற பெயரில் சென்னையில் விழா நடைபெற்றது. இதில் மகளிருக்காக திமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டங்கள் மூலமாக பயனடைந்தோர் பலரும் மேடையேறி நன்றி தெரிவித்தனர். இந்த நிலையில் தர்மபுரியில் முன்னாள் அமைச்சர் பழனியப்பன் இல்லத் திருமண விழாவில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினார்.
இந்த திருமண விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேசுகையில், தர்மபுரி மேற்கு மாவட்டச் செயலாளர் பழனியப்பனின் மகன் எழில் - கிருத்திகா மணவிழாவை நடத்தி வைத்து, வாழ்த்தும் வாய்ப்பு அமைந்தமைக்கு மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். தொடர்ந்து அரசு நிகழ்ச்சிகள், புதிய திட்டங்களை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சிகள், கட்சி நிகழ்ச்சிகள், ஆய்வுக் கூட்டங்கள் என்று பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்து வருகிறது.
இப்படியான சூழலில் பழனியப்பன் இல்ல விழாவில் கலந்து கொண்டது எனக்கே ரிலாக்ஸாக அமைந்துள்ளது. நேற்று முன்தினம் வெல்லும் தமிழ்ப் பெண்கள் நிகழ்ச்சி நடைபெற்றது. மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் கூடுதலாக 17 லட்சம் சகோதரிகளுக்கு ரூ.1000 வழங்கும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்திருக்கிறோம். இதுவரை 1.13 கோடி பேருக்கு வழங்கப்பட்டு வந்தது. தற்போது இதன் எண்ணிக்கை 1.30 கோடியாக உயர்ந்துள்ளது.
இப்போதும் சில தகுதியுள்ளவர்கள் விடுபட்டிருந்தால், மீண்டும் விண்ணப்பிக்கும் பட்சத்தில் அவர்களுக்கு நிச்சயம் வழங்கப்படும் என்று உறுதி அளிக்கிறேன். அதேபோல் மகளிர் உரிமைத் தொகை இன்னும் உயரும் என்றும் கூறி இருக்கிறேன். அதுமட்டுமல்லாமல் ஜிடிபி வளர்ச்சியில் தமிழ்நாடு தான் நம்பர் ஒன் மாநிலமாக உருவாகி இருக்கிறது. இது நாங்கள் வெளியிட்ட அறிக்கை அல்ல.. ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கை.
எவ்வளவோ சோதனைகள் அளிக்கப்பட்டாலும், அதனை கடந்து சாதனை படைத்துள்ளோம். இன்னொரு பக்கம் SIR பணிகள் நடந்து கொண்டிருக்கிறது. SIR பணிகளில் திமுக எவ்வளவு வெற்றிகரமாக நடத்தி கொண்டிருக்கிறது. நமது வாக்குரிமையை நாம் காப்பாற்றியாக வேண்டும். இன்னும் விழிப்புடன் வேலை பார்க்க வேண்டும்.
இப்போது பாதி வேலை மட்டுமே முடிவடைந்துள்ளது. தேர்தல் முடிவுகள் வெளியான பின்னரே முழு பணிகளும் முடிவடையும். தேர்தலுக்கு இன்னும் சில மாதங்கள் மட்டுமே இருக்கிறது. திமுக அரசின் சாதனைகள் மக்களுக்கு சென்றடைந்திருக்கிறது. ஆனால் எதிரிகள் நம்மை வீழ்த்த முயற்சிக்கும் போது, நாம் ஏமாந்துவிடக் கூடாது. 7வது முறையாக திமுக ஆட்சி அமைக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
-
எழும்பூர் டூ பத்மநாபபுரம் வரை.. திமுகவில் சீட் மறுக்கப்பட்ட சிட்டிங் எம்எல்ஏக்கள்! முழு விவரம் -
விட்டு கொடுக்காத திமுக.. விஜய்யுடன் நேருக்கு நேர் போட்டி.. பெரம்பூர் சிட்டிங் எம்எல்ஏக்கு வாய்ப்பு -
பெண்கள், படித்தவர்களுக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்..டாக்டர் பட்டம் பெற்றவர்கள் மட்டும் இத்தனை பேரா? -
Election Exclusive: வரம் கொடுத்த சாமி தலையில் கை வைத்த பிரேமலதா.. திமுக தொகுதிகளை கேட்டு அடம்! குட்டையைக் குழப்பு காங்.! -
கோவையில் செந்தில் பாலாஜிக்கு ஷாக் கொடுத்த வேலுமணி.. அதிமுகவுக்கு தாவிய திமுக கவுன்சிலர்! -
170 திமுக மாஸ்டர் பீஸ் தலைகீழா போகுதா? கியரை மாற்றிய அதிமுக.. லட்டு மாதிரி கையில் முத்தரையர் ஓட்டு? -
திமுக பிடிவாதம் காட்டும் 5 தொகுதிகள்.. 23 தொகுதிகளை அடையாளம் கண்ட காங்கிரஸ்! செல்வப்பெருந்தகை அப்டேட் -
விசிகவுக்கு திருப்போரூர், பெரியகுளம் உள்பட 8 தொகுதிகள்! உத்தேச பட்டியல் வெளியீடு! -
ஒரே நாளில் 4 கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்கீடு.. திமுக கூட்டணியில் சீட் ஷேரிங் ஓவர்! -
அன்று 3 சீட்டை திருப்பி தந்த சரத்.. இன்று மொத்த சீட்டையும் விட்டு தந்த கமல் - டார்ச் லைட் பவர் என்ன? -
SV Shekher: 'புதருக்கு பின்னால் ஏன் அந்த பொண்ணு போகணும்' சர்ச்சை பேச்சுக்கு மன்னிப்பு கேட்டார் எஸ்வி சேகர் -
திமுக vs காங்கிரஸ்.. 5 தொகுதிகளில் நேரடி போட்டி! பீகார் ஸ்டைலில் புதுவையிலும் நடக்கும் சம்பவம்











Click it and Unblock the Notifications