ஜல்லிக்கட்டு ஆதரவு போராட்ட களத்தில் சேவல் சண்டை.. புதுச்சேரியில் இளைஞர்கள் உற்சாகம்
புதுச்சேரியில் ஜல்லிக்கட்டு ஆதரவாக சேவல் சண்டை நடைபெற்றது.
புதுச்சேரி: புதுச்சேரி நீதிமன்றம் எதிரே ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தடையை மீறி சேவல் சண்டை நடத்தப்பட்டது.
பொங்கல் பண்டிகையின் முக்கிய நிகழ்வாக ஜல்லிக்கட்டு நடத்தப்படும். ஆனால் கடந்த 2 ஆண்டுகளாக உச்சநீதிமன்ற தடையால் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த முடியாமல் போனது. தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும் என்ற கோரிக்கை வலுவாக எழுத்துள்ளது. மேலும், மாணவர்கள், இளைஞர்கள், பெண்கள், மாணவிகள் என அனைத்து தரப்பினரும் போராட்டத்தில் குதித்துள்ளனர்.

இதையடுத்து ஜல்லிக்கட்டுக்காக தமிழக அரசு அவசரச் சட்டம் இயற்றியது. இந்த நிலையில், தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுக்கு நிரந்தர தீர்வு கோரி அலங்காநல்லூர், சென்னை மெரினா உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு இடங்களில் மாணவர்களின் தன்னெழுச்சிப் போராட்டம் தொடர்கிறது.
புதுச்சேரியிலும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இளைஞர்களும் மாணவர்களும் போராட்டம் நடத்தி வருகின்றனர். புதுச்சேரி நீதிமன்றம் எதிரே நடைபெற்று வரும் போராட்டக் களத்தில் சேவல் சண்டை நடைபெற்றது.












Click it and Unblock the Notifications