தீவிரவாத ஒழிப்பு தின உறுதிமொழி: தமிழக அரசுக்கு எதிராக போராட்டம் நடத்த தயாராகும் காங்கிரஸார்
சென்னை: தமிழக அரசுக்கு எதிராக தமிழக காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் போராட்டம் நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொல்லப்பட்ட நாளான மே 21ம் தேதி தீவிரவாத ஒழிப்பு தினமாக கடைபிடிக்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் மே 21ம் தேதி சென்னை தலைமைச் செயலகத்தில் அன்றைய முதல்வர் தலைமையில் அமைச்சர்களும், அரசு ஊழியர்களும் பயங்கரவாத உறுதிமொழி எடுத்துக் கொள்வது வழக்கம். இதுவரை அந்த நடைமுறையை கடைபிடித்து வந்தார் முதல்வர் ஜெயலலிதா. ஆனால் இந்த ஆண்டு அந்த நடைமுறையை அவர் கைவிட்டார்.
மேலும் இது ஒரு மரபு தான், சட்டம் அல்ல. பல மாநிலங்கள் இந்த இது போன்று செய்வதில்லை என தகவல் வெளியானது.
இந்த சம்பவம் காங்கிரஸார் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. தமிழக அரசு அரசியல் சார்பு நிலை எடுத்து செயல்படுவதாக காங்கிரஸார் குற்றம் சாட்டினர். மேலும், தமிழக அரசை ராஜீவ் காந்தி ஆன்மா கூட மன்னிக்காது என சாபம் விட்டனர்.
இந்த நிலையில் காங்கிரஸார் இந்த சம்பவம் குறித்து அதன் டெல்லி தலைமைக்கு தெரியப்படுத்தியுள்ளனர். இதனையடுத்து தமிழக அரசுக்கு தங்களது கோபத்தை வெளிகாட்டும் வகையில் மாவட்டம் மற்றும் மாநில அளவில் உள்ள பிரச்சனைகளை மையமாக வைத்து போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர். இதற்கான அனுமதியையும் டெல்லி தலைமையிடம் பெற்றுவிட்டார்களாம்.
விரைவில் தமிழக அரசுக்கு எதிராக காங்கிரஸ் மூத்த நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் போராட்டம் நடத்தவிருக்கிறார்கள்.
-
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி! -
புதிய ஆட்சிக்கு இது அழகல்ல.. தென் மாவட்டங்களில் தொடர் சாதிய வன்முறைகள்! கொதித்து பேசிய பா ரஞ்சித் -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம்












Click it and Unblock the Notifications