சட்டசபையில் யாருக்கு ஆதரவு.. காங்கிரஸ் எம்எல்ஏக்களின் அவசர ஆலோசனை
நாளை கூட உள்ள சிறப்பு சட்டசபையில் யாருக்கு ஆதரவு அளிப்பது என்பது தொடர்பாக ஆலோசனை நடத்த காங்கிரஸ் எம்எல்ஏக்களின் அவசர ஆலோசனைக் கூட்டம் இன்று மாலை 4 மணிக்கு நடைபெறுகிறது.
சென்னை: எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நேற்று புதிய அரசு பொறுப்பேற்றது. நாளை அந்த அரசு நம்பிக்கை வாக்கெடுப்பை சட்டசபையில் கோருகிறது. இதில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் யாருக்கு ஆதரவளிக்க வேண்டும் என்பது குறித்து ஆலோசனை நடத்த காங்கிரஸ் எம்எல்ஏக்களின் கூட்டம் இன்று மாலை நடைபெற உள்ளது.
28 ஆண்டுகளுக்கு பின்னர் நாளை தமிழக சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்கும் பலப்பரிட்சையை எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு எதிர்க் கொள்ளவிருக்கிறது. இந்தக் கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியைச் எம்.எல்.ஏக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும் என்று அக்கட்சியின் கொறடா விஜயதாரணி ஏற்கனவே உத்தரவிட்டுள்ளார்.

கொறடா உத்தரவு மிக முக்கியமானது என்பதால் அனைத்து எம்எல்ஏக்களும் பங்கேற்பார்கள். மீறினால் எம்எல்ஏக்கள் பதவி பறிபோகும் வாய்ப்பு உண்டு. இந்நிலையில், இன்று மாலை காங்கிரஸ் எம்எல்ஏக்களின் அவசரக் கூட்டத்தை காங்கிரஸ் கட்சி ஏற்பாடு செய்துள்ளது.
மாலையில் நடைபெறும் எம்எல்ஏக்களின் கூட்டத்தில், சட்டசபையில் எம்எல்ஏக்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்றும் யாருக்கு ஆதரவளிக்க வேண்டும் என்பது குறித்தும் ஆலோசிக்கப்பட உள்ளது. அதிமுக பிளவுபட்டிருக்கும் இந்த நிலையில் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஒவ்வொரு எம்எல்ஏக்களின் ஆதரவும் அதி முக்கியம். எனவே, இந்த அவசர ஆலோசனைக் கூட்டத்தை காங்கிரஸ் ஏற்பாடு செய்துள்ளது.












Click it and Unblock the Notifications