நெல்லையில் மத பிரசாரம் செய்ததாக குற்றச்சாட்டு: தைவான் நாட்டை சேர்ந்த 11 பேரிடம் விசாரணை
நெல்லை: நெல்லை யில் மத பிரசாரம் செய்ததாக புகார் எழுந்ததையொட்டி தைவான் நாட்டைச் சேர்ந்த 11 பேரிடம் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் விசாரணை நடந்தது.
தைவான் நாட்டைச் சேர்ந்த 8 பெண்கள் உள்பட 11 பேர் சுற்றுலா விசா பெற்று இந்தியா வந்துள்ளனர். இவர்கள் கடந்த 24ம் தேதி பாளையங்கோட்டை என்ஜிஓ பி காலனியில் உள்ள பிரபாகர் என்பவரது வீட்டில் தங்கினர்.

இந்நிலையில் தைவான் நாட்டை சேர்ந்தவர்கள் கிறிஸ்துமஸ் தினத்தன்று பெருமாள்புரம் வாட்டர் டேங்க் அருகே சிலரிடம் துண்டு பிரசுரம் விநியோகித்து மத பிரசாரம் செய்ததாக தகவல் பரவியது. தகவல் அறிந்ததும் பாஜ மாவட்ட அமைப்பாளர் சுரேஷ் தலைமையிலான கட்சியினர் அங்கு தைவான் நாட்டினரிடம் மத பிரசாரம் குறித்து கேள்வி எழுப்பியதால் பிரச்னை ஏற்பட்டது.
சம்பவ இடத்திற்கு பெருமாள்புரம் போலீசார் சென்று விசாரணை நடத்தியதோடு வெளிநாட்டினரை அவர்கள் தங்கியிருந்த வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக தைவான் நாட்டைச் சேர்ந்த 11 பேரும் நேற்று காலை நெல்லை போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு வரவழைக்கப்பட்டனர். துணை கமிஷனர் சுரேஷ்குமார் அவர்களிடம் விசாரணை நடத்தினார்.
தைவானில் இருந்து நெல்லைக்கு அவர்கள் வந்ததன் நோக்கம் குறித்து விசாரித்தார். அவர்களது விசா கார்டுகளையும் வாங்கி பார்வையிட்டார். பாளையங்கோட்டையில் அவர்கள் தங்க அனுமதி கோரும் சி படிவம் நிரப்பி கொடுத்துள்ளார்களா என்பது குறித்தும் கேட்டறிந்தார். தைவான் நாட்டைச் சேர்ந்த யூஜி காகே, பான்யூஜின் ஆகியோர் தலைமையிலான குழுவினர் துணை கமிஷனரிடம் உரிய தகவல்களை அளித்தனர். மேலும் அவர்களை தங்க வைத்த என்ஜி ஓபி காலனியை பிரபாகரிடம் விசாரணை நடந்தது. இதனால் நெல்லை கமிஷனர் அலுவலகத்தில் நேற்று பரபரப்பு ஏற்பட்டது.
இதேபோல, நெல்லை மாவட்டம் களக்காடு அருகேயுள்ள பத்மநேரியில் ஜெபகூடத்தை அகற்ற கோரி, ரேஷன்கார்டுகளை திருப்பி கொடுக்கும் போராட்டத்தை பிற மதத்தினர் நேற்று நடத்தினர். டிஎஸ்பி சண்முகம், தாசில்தார் கல்யாணகுமார் ஆகியோர் நேரில் வந்து மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி அவர்கள் கோரிக்கையை ஏற்பதாக உறுதியளித்த பிறகே போராட்டம் கைவிடப்பட்டது.
-
வீட்டில் தனியாக இருந்த 2 பெண்களிடம் அத்துமீற முயன்ற வடமாநில நபர் கொலை.. திருவள்ளூர் அருகே ஷாக்! -
நெல்லை அருகே லாரி மீது மோதி சிதறிய ஆம்னி பேருந்து.. 20 பேர் படுகாயம்! -
ஆலங்குளம் அருகே 6 பேர் அரிவாளால் வெட்டப்பட்ட வழக்கில் ஷாக்.. ஒருவரை சுட்டுப் பிடித்தது போலீஸ்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications