”ஜல்லிக்கட்டு வேண்டும் எங்களுக்கு” - மாநிலம் தழுவிய சுற்றுப்பயணத்தில் சென்னை தம்பதி!
சென்னை: தமிழகத்தில் ஜல்லிக்கட்டினை தடை செய்ததை நீக்கக் கோரி சென்னையை சேர்ந்த கணவன், மனைவி இருசக்கர வாகனத்திலேயே விழிப்புணர்வு பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
சென்னையை சேர்ந்த பால செல்வ முருகன் மற்றும் ஸ்டெல்லா மேரி தம்பதியர் தமிழர் பாரம்பரியம் மற்றும் கலாச்சாரத்தை வெளிப்படுத்தும் ஜல்லிக்கட்டு மற்றும் ரேக்ளா ரேஸ் பந்தயம் தடை செய்யப்பட்டதால் வேதனை அடைந்தனர்.
இதனை வெளிப்படுத்தும் விதமாக சென்னையில் இருந்து இருசக்கர வாகனத்தில் கருப்புக்கொடி ஏற்றி மாநிலம் தழுவிய சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளனர். மதுரை அவனியாபுரம் சென்ற அவர்களை பல்வேறு தரப்பினரும் வரவேற்றனர்.
அவசர சட்டம் இயற்றுவதன் மூலமே ஜல்லிக்கட்டை நடத்த முடியும் என்பதால் மத்திய- மாநில அரசுகள் அதனை நிறைவேற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தி இந்த சுற்றுப் பயணத்தை மேற்கொண்டுள்ளதாக செல்வமுருகன் - ஸ்டெல்லா மேரி தம்பதியினர் தெரிவித்துள்ளனர்.