கலாநிதி மாறன் மீதான வரி ஏய்ப்பு வழக்கு... நவம்பர் 6-ம் தேதிக்கு ஒத்திவைப்பு

Subscribe to Oneindia Tamil

டெல்லி : கலாநிதிமாறன் மீதான வரி ஏய்ப்பு தொடர்பான வழக்கை, நீதிமன்றம் நவம்பர் 6 ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.

ஸ்பைஸ்ஜெட் விமான நிறுவன தலைவராக கலாநிதி மாறன் இருந்தபோது, கடந்த 2014 மற்றும் 2015 ஆம் ஆண்டுகளில், ஊழியர்களிடம் இருந்து பிடித்தம் செய்த சுமார் 146.5 கோடி ரூபாயை செலுத்தாமல், வரி ஏய்ப்பு செய்ததாக வருமான வரித்துறை சார்பில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

kalanithi maran

இந்த வழக்கில் கலாநிதிமாறன், அதன் நிர்வாக இயக்குனர் உள்ளிட்டோர் நேரில் ஆஜராக வேண்டுமென்று டெல்லி நீதிமன்றம் சம்மன் அனுப்பியிருந்தது.

இந்த சம்மனுக்கு தடை விதிக்கக் கோரி, கலாநிதிமாறன் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு செய்திருந்தார். இதனையடுத்து கலாநிதிமாறன் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டது.

இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தபோது, டெல்லி உயர்நீதிமன்றத்தில் வரி ஏய்ப்பு வழக்கு நிலுவையில் உள்ளதால், அதுவரை நீதிமன்ற நடவடிக்கைக்கு தடை விதிக்க வேண்டும் என கலாநிதிமாறன் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதனை ஏற்க மறுத்து வழக்கின் அடுத்தக்கட்ட விசாரணையை நவம்பர் 6 ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்தி வைத்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+