காவிரி: மத்திய அரசு அலுவலங்களுக்கு திரும்பும் திசையெங்கும் பூட்டு... வலுக்கும் எதிர்ப்புகள்!
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழகத்தில் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன. கடலில் இறங்கி போராட்டம், தபால் நிலையத்திற்கு பூட்டு போடுதல் என போராட்ட வடிவங்கள் மாறி வருகின்றன.
Recommended Video

ராமேஸ்வரம் : காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழகம் முழுவதும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ராமேஸ்வரத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் கடலில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்தும், மத்திய அரசுக்கு உரிய அழுத்தம் கொடுக்காத தமிழக அரசைக் கண்டித்தும் தமிழகம் முழுவதும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ரயில் மறியல் போராட்டத்தை நடத்தி வருகிறது. சென்னை பேசின் பிரிட்ஜில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் தலைமையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் மறியலில் ஈடுபட்டனர்.

மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் ரயில்வே துறைக்கு தமிழகத்தில் இருந்து இருக்கும் எதிர்ப்பு என்ன என்பதை வெளிப்படுத்தும் விதமாகவே ரயில் மறியல் போராட்டம் நடப்பதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் தெரிவித்துள்ளனர்.
கோவை, திருச்சி ரயில் நிலையங்களின் வாயிலிலும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். ராமேஸ்வரத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் கடலில் இறங்கிப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி நாம் தமிழர் கட்சியினரும் பல கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் வந்தவாசியில் தபால் நிலையத்துக்கு நாம் தமிழர் கட்சியினர் பூட்டு போட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
இதனிடையே கடலூரில் பாஸ்போர்ட் அலுவலகத்திற்கு நாம் தமிழர் கட்சியினர் பூட்டு போட் முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. பாதுகாப்பிற்காக நிறுத்தப்பட்டிருந்த போலீசார் போராட்டக்காரர்களை தடுத்து நிறுத்தியதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. மதுரையில் வருமான வரித்துறை அலுவலகத்திறகு நாம் தமிழர் கட்சியினர் பூட்டு போட்டு போராட்டம் நடத்தினர்.
-
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
சிறகடிக்க ஆசை: முத்து- மீனா சொன்ன மகிழ்ச்சி செய்தி! கேக் கொடுத்து கொண்டாட்டம்! மனம் மாறிய விஜயா! -
முடியாதுனு முடியாது.. கட் அண்ட் ரைட்டாக பேசிய அண்ணாமலை! விடிய விடிய பேசிய கோயல்! கடைசி சான்ஸ்? -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
அதிமுக, தமிழக வெற்றிக் கழகம்.. மொத்தமாக கேம் ஓவர்.. அடித்து சொல்லும் 3 பெரிய கருத்து கணிப்புகள்! -
அமெரிக்காவை ஏமாற்றிய டிரம்ப்.. எல்லாமே ஒரு லிமிட் தான்.. அடுத்து என்ன! உற்று பார்க்கும் உலக நாடுகள் -
குக் வித் கோமாளி 7 தொடங்கும் முன்பே பஞ்சாயத்து.. புகழ் பற்றி நெட்டிசன் போட்ட கமெண்டுக்கு வந்து விழுந்த அடி! -
இல்லத்தரசி கூப்பன்.. கிராமங்களில் உள்ளவர்களுக்கு செம சான்ஸ்.. ஸ்டாலின் மாஸ்டர்பிளான்? கசிந்த தகவல் -
திருச்சி ரோடு ஷோவில்.. வேனில் இருந்து எகிறி குதித்து ஓடிய விஜய்.. பதறிய பவுன்சர்கள்.. யாரந்த பெண்? -
அண்ணன் சொல்லிட்டாரு.. சட்டென களத்திற்கு வந்த பிரேமலதா.. இல்லத்தரசி கூப்பன் பற்றி செம அப்டேட்! -
ஆத்திரத்தின் உச்சியில் அண்ணாமலை..டெல்லியை ஆட்டி படைக்கும் அடிவருடிகள்! கருப்பு சிகப்பாகும் காவிகள்?












Click it and Unblock the Notifications