பட்டுக்கோட்டையில் கருகிய பயிரை கண்ட விவசாயி அதிர்ச்சியில் மரணம் - மற்றொரு விவசாயி தற்கொலை
பருவமழை பொய்த்துப் போய் பயிர்கள் கருகி வருவதால் விவசாயிகள் மரணமடைவது தொடர்கதையாகி வருகிறது. பட்டுக்கோட்டை அருகே கருகிய பயிரைக் கண்ட விவசாயி அதிர்ச்சியில் உயிரிழந்துள்ளார்.
தஞ்சாவூர்: தண்ணீர் இல்லாமல் பயிர்கள் காய்ந்த சோகத்தை தாங்க முடியாமல் தஞ்சை மாவட்டத்தில் விவசாயி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
காவிரியில் உரிய தண்ணீரை கர்நாடகா வழங்காததையடுத்து சம்பா சாகுபடியில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் கலக்கத்தில் உள்ளனர். மேட்டூரில் திறக்கப்பட்ட தண்ணீர் கடைமடை பகுதிகளுக்கு இன்னும் சென்று சேரவில்லை. இதனால் காவிரி டெல்டா மாவட்டங்களில் விவசாயிகள் அதிர்ச்சியில் உயிரிழப்பதும் மரணமடைவதும் தொடர்கதையாகி வருகிறது.

பட்டுக்கோட்டை அருகே தம்பிக்கோட்டை வடகாடு கிராமத்தில் விவசாயி நாராயணசாமி என்பவர் உயிரிழந்தார். தண்ணிரின்றி பயிர் கருகியதால் இதுவரை மனஉளைச்சலில் 11 விவசாயிகள் உயிரிழந்துள்ளனர்.
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அடுத்த பொன்னவராயன்கோட்டை உக்கடை கிராமத்தை சேர்ந்தவர் மாசிலாமணி,50 என்ற விவசாயி. இவர் அதே ஊரில் நிலத்தை குத்தகைக்கு எடுத்து நெல் சாகுபடி செய்து வந்தார்.
இந்நிலையில் பயிருக்கு காவிரி தண்ணீர் கிடைக்காததால் பயிர்கள் கருகியது. இதைப்பார்த்து மனமுடைந்த விவசாயி மாசிலாமணி ஞாயிறன்று விஷம் குடித்து மயங்கி விழுந்தார். அக்கம் பக்கத்தினர் உடனே அவரை மீட்டு பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு வந்தனர். மிகவும் ஆபத்தான நிலையில் இருந்த மாசிலமணியை மேல் சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார்.
சமீபத்தில் தமிழகத்தில் இதுவரை 14 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளது பெரும் வேதனையளிக்கிறது. காவிரியில் உரிய தண்ணீர் வழங்காத கர்நாடக அரசும், தண்ணீர் திறக்க எவ்வித அழுத்தமும் தராத மத்திய அரசும் தான் விவசாயிகள் தற்கொலை தொடர காரணம் என விவசாயிகள் சங்க நிர்வாகத்தினர் குற்றம்சாட்டியுள்ளனர்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications