கம்பம் கோவில் பட்டத்து மாடு மரணம்- மரியாதை செலுத்திய முஸ்லிம்கள்- நெகழ்ச்சியான இறுதி ஊர்வலம்
கம்பம்: கம்பம் நந்தகோபாலன் கோவிலில் மரணமடைந்த பட்டத்து மாட்டுக்கு மதங்களைக் கடந்து ஒட்டுமொத்த மக்களும் கண்ணீருடன் இறுதி மரியாதை செலுத்தினர். மாட்டின் இறுதி ஊர்வலத்தின் போது பள்ளிவாசல் அருகே முஸ்லிம் மக்கள் இறுதி மரியாதை செலுத்தினர்.
கம்பத்தில் உள்ள நந்தகோபாலன் கோவிலில் சாமி சிலைகள் எதுவும் இல்லை. இங்கே உள்ள பட்டத்து மாடுதான் பிரதான தெய்வம். சாமிக்கு செய்யப்படும் அனைத்து மரியாதைகளும் சடங்குகளும் பட்டத்து மாட்டுக்குதான் செய்யப்படும்.

பட்டத்து மாடு
இக்கோவிலில் பராமரிக்கப்படும் மாடுகளில் பட்டத்து மாடாக ஒன்றை தேர்வு செய்து வழிபடுவர். பட்டத்து மாடு தேர்ந்தெடுக்கப்படும் நிகழ்ச்சியானது பிரமாண்டமாக நடைபெறும். தேர்ந்தெடுக்கப்படும் பட்டத்து மாட்டுக்கு ராஜ அலங்காரமும் செய்யப்படும்.

400 மாடுகள்
இக்கோவில் தொழுவத்தில் 400-க்கும் மேற்பட்ட மாடுகள் பராமரிக்கப்படுகின்றன. ஒக்கலிகர் சமூகத்தினர் இக்கோவிலை பராமரித்தாலும் அனைத்து தரப்பு மக்களும் வழிபாடு நடத்திச் செல்வர். இந்த கோவிலின் பட்டத்து மாடு நேற்று காலை மரணமடைந்தது.

இறுதி சடங்குகள்
இச்செய்தி கம்பம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளுக்கு பரவியதைத் தொடர்ந்து மக்கள் பெருமளவில் கோவிலில் குவிந்தனர். மரணித்த மாட்டுக்கு மனிதர்களுக்கு செய்வதைப் போல இறுதி சடங்குகள் அனைத்துமே செய்யப்பட்டன.

இறுதி ஊர்வலம்
பின்னர் மனிதர்கள் இறந்தால் எப்படி இறுதி ஊர்வலம் நடத்தப்படுமோ அதுபோல பட்டத்து மாட்டுக்கும் இறுதி ஊர்வலம் நடத்தப்பட்டது.

முஸ்லிம்கள் அஞ்சலி
இந்த இறுதி ஊர்வலம் கம்பம் பெரிய பள்ளிவாசல் வழியாக சென்றது. அப்போது முஸ்லிம் மக்கள் திரண்டு இறந்த பசுமாட்டுக்கு இறுதி மரியாதை செலுத்தியது பெரும் நெகிழ்ச்சியாக இருந்தது.
மதநல்லிணக்கம்
மாடுகளின் பெயரால் மனிதர்களை பிரித்து ஒருவரை ஒருவர் அடித்து கொள்ள வைக்க ஒரு கூட்டமே சதி செய்து கொண்டிருக்கிறது... ஆனால் சமூக நீதியின் தாய் மண்ணான தமிழகமோ மாட்டின் பெயரால் மதநல்லிணக்கத்தை நிலைநாட்டியிருக்கிறது!
கட்டுப்பாடு
மேலும் மாட்டுக்கு இறுதிச் சடங்குகளை செய்பவர்கள் பெற்றோர் உட்பட யாருடைய சவத்தையுமே நேரில் பார்க்கவும் மாட்டார்கள்... துக்க வீடுகளுக்கும் செல்லமாட்டார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
-
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் வைகாசி மாத பிரம்மோற்சவம்.. தங்கக் கருட வாகனத்தில் காட்சி! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications