மாதி வலுவிழந்தது.. ஆனால் சென்னையை நோக்கி நகர்வதால் கன மழை வருமாம்
சென்னை: மாதி புயல் வலுவிழந்து விட்டபோதிலும், அது சென்னையை நோக்கி வருவதால் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து வானிலை ஆய்வு மைய செய்திக்குறிப்பில், கூறப்பட்டுள்ளதாவது:
''தென்மேற்கு வங்கக் கடலில் நிலைக்கொண்டிருந்த மாதி புயல், வலுவிழந்து ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறியது. அது தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி, சென்னையை நோக்கி நகர்ந்து வருகிறது.

கனமழை
காற்றழுத்த தாழ்வு மண்டலமானது, தற்போது சென்னையில் இருந்து 270 கி.மீ. தொலைவில் நிலை கொண்டுள்ளது. இதனால், அடுத்த 12 மணி நேரத்தில் வடதமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழை பெய்யும்.
சென்னையில் மேக மூட்டமாக காணப்படும் என்றும், இரவில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் வானிலை மையம் அறிவித்துள்ளது.
மீனவர்களுக்கு எச்சரிக்கை
குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளதால், மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்படுகிறார்கள்'' எனக் கூறப்பட்டுள்ளது.
நாகையில் கடல் சீற்றம்
மாதி' புயல் உருவானதைத் தொடர்ந்து நாகை மாவட்டத்தில் கடல் சீற்றம் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக, கடந்த 5 நாள்களாக நாகை மாவட்டத்தில் பைபர் படகு மூலமான மீன்பிடித் தொழில் பாதிக்கப்பட்டுள்ளது.
புயல் எச்சரிக்கை கூண்டு
புயல் எச்சரிக்கையையொட்டி, நாகை துறைமுக அலுவலகத்தில் கடந்த 4 நாள்களாக நீடித்து வந்த 2-ம் எண் புயல் எச்சரிக்கை புதன்கிழமை குறைக்கப்பட்டு 1-ம் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டது
-
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
எங்கிட்ட எப்படி ஆதரவு கேட்கலாம்? கவுண்டம்பாளையம் அதிமுக வேட்பாளரிடம் சொன்ன வார்த்தை.. பின்னணி -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
அதிமுக, தமிழக வெற்றிக் கழகம்.. மொத்தமாக கேம் ஓவர்.. அடித்து சொல்லும் 3 பெரிய கருத்து கணிப்புகள்!












Click it and Unblock the Notifications