பக்தர்களின் வசதிக்காக சபரிமலையில் தரிசன நேரம் அதிகரிப்பு - திருவிதாங்கூர் தேவசம் போர்டு
சபரி மலையில் பக்தர்கள் வசதிக்காக தரிசனம் நேரம் அதிகரிக்கப்பட்டுள்ளதாக திருவிதாங்கூர் தேவசம் போர்டு தெரிவித்துள்ளது.
செங்கோட்டை: சபரிமலைக்கு வரும் ஐயப்ப பக்தர்கள் வசதிக்காக தரிசன நேரம் தினமும் 5 மணி நேரம் கூடுதலாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக திருவிதாங்கூர் தேவசம் போர்டு தலைவர் பிரயார் கோபாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
கேரள மாநிலம் திருவிதாங்கூர் தேவசம் போர்டு தலைவர் பிரயார் கோபாலகிருஷ்ணன் ஆரியங்காவு ஐயப்பன் கோயிலில் 24-ம் தேதி நடைபபெறும் பாண்டியன் முடிப்பு திருவிழாவுக்கான முன்னேற்பாடுகளை பார்வையிடுவதற்காக நேற்று கோட்டைவாசல் கருப்பாசாமி கோவிலுக்கு வந்தார். அங்கு நடைபெறும் கட்டுமானப் பணிகளை பார்வையிட்ட அவர் ஆரியங்காவு ஐயப்பன் கோவிலில் ஏற்பாடுகளை பார்வையிட்டார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது: சபரிமலையில் பிளாஸ்டிக் பயன்பாடு முற்றிலுமாக ஒழிக்கப்பட்டுள்ளது. மேலும் ஐயப்பன் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு அதிகாலை, காலை, மதியம், மாலை, இரவு ஆகிய 5 நேரங்களுக்கு உணவு, உப்புமா, கஞ்சி, பயிறு வகைகள் வழங்கப்பட்டு வருகிறது.

நாடு முழுவதிலுமிருந்து வரும் ஐய்யப்ப பக்தர்களுக்கு முழுமையான பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகிறது. நாளுக்கு நாள் அதிகரித்து வரும் பக்தர்களின் வசதிக்காக தரிசன நேரம் தினமும் 5 மணி நேரம் கூடுதலாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு அரிவராசனம் பாடப்பாட்டு 11 மணிக்கு நடை அடைக்கப்படுகிறது. கூடுதல் பக்தர்கள் வருகையினால் சாமி தரிசனத்திற்கு காலதாமதமானால் அவர்களிடம் நெய்த் தேங்காயை பெற்றுக்கொண்டு 11.30 மணிக்கு அபிஷேகம் செய்து பிரசாதம் வழங்கப்படும்.

கோடான கோடி ஐய்யப்ப பக்தர்கள் வந்து செல்லும் இங்கு முற்றிலும் பிளாஸ்டிக் ஒழிக்கப்பட்டு உள்ளது. நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் பக்தர்களை கேரளா மக்கள் ஆலய வளாகத்தினுள் அவமதிப்பதாக வரும் செய்திகள் தவறானவை. அப்படி ஏதும் நடந்து இருந்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
-
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் வைகாசி மாத பிரம்மோற்சவம்.. தங்கக் கருட வாகனத்தில் காட்சி! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications