அனைத்து பக்கமும் கட்டம் கட்டப்படும் தீபா.. அரசியல் எதிர்காலம் அவ்வளவுதானா?
அரசியலை விட்டு தீபாவை வெளியேற்ற தேவையான அனைத்து ஆயத்தப் பணிகளும் ஒருபக்கம் நடந்து வருகின்றன. தீபாவின் அடுத்தகட்டட நடவடிக்கை என்னவாக இருக்கும் என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.
சென்னை: அதிமுகவில் தற்போது கண்கள் பனித்து, இதயம் இனிக்கும் படலம் இனிதே அரங்கேறிக்கொண்டுள்ளது.
ஜெயலலிதா மரணத்திலுள்ள மர்மங்களை அவிழ்க்க சிபிஐ விசாரணை அமைக்க வேண்டும், சசிகலா குடும்பத்தை அதிமுகவிலிருந்தே விலக்க வேண்டும் என்பது ஓ.பன்னீர்செல்வம் டீம் கோரிக்கை.
ஆனால், கோர்ட்டில் வழக்கிருப்பதால் சிபிஐ விசாரணைக்கு பரிந்துரைக்க முடியாது, தேர்தல் ஆணையத்தில் விசாரணை நடப்பதால் சசிகலா குடும்பத்தை விலக்க முடியாது என்று எடப்பாடி டீம் பதிலடி கொடுத்துவிட்டது.

இரு அணிகளுக்கும் கட்டாயம்
ஆனாலும் வேறு வழியில்லை ஓ.பி.எஸ் அணிக்கு. எப்படியாவது எடப்பாடி பழனிச்சாமி அணியோடு சேர்ந்து செயல்பட வேண்டிய கட்டாயம் அந்த அணிக்கு உள்ளது. இரட்டை இலை சின்னம் சிக்கலில் மாட்டியுள்ளதால் பன்னீர்செல்வம் அணியை பக்குவமாக அணைத்து செல்ல வேண்டிய கட்டாயம், எடப்பாடி அணிக்கு உள்ளது.

பகைக்க முடியாது
இதுதவிர தொழில் விவகாரங்களில் எடப்பாடி மற்றும் பன்னீர்செல்வம் நடுவே நல்லிணக்கம் உள்ளது. 25 வருடங்களாக இணைந்து செயல்பட்டவர்கள். எனவே ஒருவரை ஒருவர் பகைத்துக்கொள்ள முடியாது. புதிதாக உள்ளே வந்த பங்காளி டிடிவி தினகரனையும் அவரது குடும்பத்தாரையும் கட் செய்துவிட்டால் இருவருக்கும் போதும்.

சசிகலா புஷ்பாவுக்கு தூது
இந்த நிலையில்தான், ஜெயலலிதா உயிரோடு இருக்கும்போதே மோதல் போக்கினால் அதிமுகவைவிட்டு வெளியேறிய, சசிகலா புஷ்பாவுக்கும் தூதுவிட்டுள்ளனர் எடப்பாடி குழுவினர். ஒரு அமைச்சரும், எம்எல்ஏவும் சசிகலா புஷ்பாவிடம் தூது போயுள்ளனராம். அவரையும் அரவணைத்துச் சென்றால்தான் டெல்லியில் அதிமுகவின் ஒற்றுமையை பறைசாற்ற முடியும் என எடப்பாடி பழனிச்சாமி டீம் நினைக்கிறது.

இரட்டை இலை சின்னம் மீட்பு
இரட்டை இலை சின்னத்தை தேர்தல் ஆணையம் முடக்க சசிகலா புஷ்பா தேர்தல் ஆணையத்திடம் அளித்த பல ஆவணங்களும் முக்கிய காரணம். எனவே அவரையும் அரவணைத்து, இரட்டை இலை சின்னத்தை தக்க வைத்துக்கொள்ளவே எடப்பாடி பழனிச்சாமி கோஷ்டி முயல்கிறது. இதுவரை சசிகலா புஷ்பா கிரீன் சிக்னல் கொடுக்கவில்லை.

பன்னீர்செல்வம் மரியாதை
ஆனால், இதில் எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை என்ற பெயரில் அமைப்பு தொடங்கிய ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா நிலை பரிதாபம். பேரவை தொடங்கும் முன்பாக பன்னீர்செல்வத்திடம் நட்பு பாராட்டினார் தீபா. வீட்டு வாசலுக்கே வந்து தீபாவை அழைத்துச் சென்றார் பன்னீர்செல்வம். ஆனால் ஆர்.கே.நகர் தேர்தல் அறிவிக்கப்பட்ட பிறகு நிலைமை தலைகீழாக மாறியது. பன்னீர்செல்வத்தை தனது பிரசாரத்தின்போது சகட்டுமேனிக்கு, திட்டி தீர்த்தார் தீபா. சசிகலா, எடப்பாடி பழனிச்சாமி என யாருமே இவரது விளாசலுக்கு தப்பவில்லை.

தீபாவுக்கு கல்தா
இந்த நிலையில், எடப்பாடி பழனிச்சாமி தரப்பும், பன்னீர்செல்வம் தரப்பும் கை கோர்த்ததோடு, சசிகலா புஷ்பாவையும் இணைக்க முயல்கிறது. ஆனால் தீபா தனியாக கழற்றிவிடப்பட்டுள்ளார். அவரால் இவ்விரு அணிக்கும் எந்த ஒரு சட்டச் சிக்கலோ, ஆதாயமோ கிடையாது என்பதால் தீபாவை கண்டுகொள்ளவில்லை, இரு அணிகளும்.

கணவரும் தனிக்கட்சி
தீபாவின் கணவர் மாதவனோ, எம்ஜிஆர் ஜெயலலிதா திமுக என்ற பெயரில் புதுக்கட்சி ஆரம்பித்துள்ளார். தீபா மீது மாம்பலம் போலீஸ் ஸ்டேஷனில், பண மோசடி புகார் கொடுக்கப்பட்டுள்ளது. அரசியலை விட்டு தீபாவை வெளியேற்ற தேவையான அனைத்து ஆயத்தப் பணிகளும் ஒருபக்கம் நடந்து வருகின்றன. தீபாவின் அடுத்தகட்டட நடவடிக்கை என்னவாக இருக்கும் என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.
-
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்? -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
நாளை திருச்சி வரும் விஜய்.. நேரில் சந்திக்கிறாரா விஜயபாஸ்கர்? அதிமுகவில் விழப்போகும் அடுத்த விக்கெட் -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
பெரிய திமிங்கலம்! அதிமுகவில் அடுத்த விக்கெட்? திருச்சி வரும் முதல்வர் விஜய்யை சந்திக்கும் சிவிஎஸ்? -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications