கன்னியாகுமரியில் ஓகி பாதிப்புகளை பார்வையிட்ட பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன்
மத்தியமைச்சர் நிர்மலா சீதாராமன் கன்னியாகுமரியில் ஓகி புயலால் பாதிக்கப்பட்ட இடங்களை ஆய்வு செய்தார்.
கன்னியாகுமரி : கன்னியாகுமரி மாவட்டத்தில் ஓகி புயலால் பாதிப்படைந்த பகுதிகளில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆய்வு மேற்கொண்டார்.
கன்னியாகுமரி மாவட்டம் ஓகி புயலால் கடுமையாக பாதிக்கப்பட்டு இருக்கிறது. சுசீந்திரம் பகுதியே வெள்ளக்காடாகி உள்ளது.

கடலில் மீன் பிடிக்கச் சென்ற மீனவர்கள் பலர் நிலைமை என்னவென தெரியவில்லை. இது குறித்து பாதிக்கப்பட்ட பகுதிகளில் மத்தியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று ஆய்வு நடத்தினார். துணை முதலைமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்தோடு பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிர்மலா சீதாராமன் மக்களைச் சந்தித்து அவர்களின் குறையை கேட்டு வருகிறார்.

மேலும் மாவட்ட ஆட்சியர் சஜ்ஜன் சிங் சவானிடம் இதுவரை மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும், மீட்புப்பணிகள் குறித்தும் நிர்மலா சீதாராமன் கேட்டறிந்தார். உடனடியாக மக்களுக்குத் தேவையான அனைத்தும் செய்து கொடுக்க நடவடிக்கைகள் எடுக்க உள்ளதாகவும் அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்து உள்ளார்.












Click it and Unblock the Notifications