மலையாக குவிந்த பழைய ரூபாய் நோட்டுகள்- ஒரே நாளில் ரூ.7 கோடி வரி வசூலித்த சென்னை மாநகராட்சி!
500, 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என அறிவிக்கப்பட்டதன் விளைவினால் சென்னை மாநகராட்சியில் ஒரே நாளில் ரூ.7 கோடியே 21 லட்சம் வசூலாகி சாதனை படைத்துள்ளது.
சென்னை: பிரதமர் நரேந்திர மோடி 500,1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என அறிவித்துள்ளதன் விளைவினால் வங்கிகளில் மட்டுமின்றி அரசு நிறுவனங்களிலும் அந்த ரூபாய் நோட்டுக்கள் குவியத் தொடங்கியுள்ளன.
செல்லாத அந்த ரூபாய் நோட்டுக்கள் ஏற்றுக் கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டதால் சென்னை மாநகராட்சியில் ஒரே நாளில் ரூ.7 கோடியே 21 லட்சம் வசூலாகி சாதனை படைத்துள்ளது.

கடந்த வாரம் 500,1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என அறிவிக்கப்பட்டதில் இருந்து சென்னை மாநகராட்சி வரி வசூல் செய்ய சிறப்பு முகாம்களை நடத்தி வருகிறது. அதன்படி விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமையும் வரி வசூல் மையங்கள் செயல்பட்டன.
இதற்காக மொத்தம் 446 சிறப்பு வரி வசூல் முகாம்கள் அமைக்கப்பட்டன. அதில் தொழில் வரி உள்ளிட் வரி வசூலில் செல்லாது என அறிவிக்கப்பட்ட 500, 1000 ரூபாய் நோட்டுக்கள் ஏற்றுக் கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
இந்த அறிவிப்பு சென்னை வாசிகள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இதனால், ஞாயிற்றுக்கிழை விடுமுறை என்ற போதிலும் சிறப்பு முகாம்களில் மக்கள் கூட்டம் அலை மோதியது. அதில் ஒரு நாளில் மட்டும் ரூ.7 கோடியே 21 லட்சம் வரி வசூலாகி இருப்பதாக மாநகராட்சி வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது தொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், பொது மக்களுக்கு உதவும் வகையில் திங்கள்கிழமையும் வழக்கமான பணி நேரத்தைவிட கூடுதல் நேரம் வரி வசூல் மையங்கள் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
நடப்பு நிதி ஆண்டில் 700 கோடி ரூபாய் சொத்து வரி வசூலிக்க சென்னை மாநகராட்சி இலக்கு நிர்ணயித்துள்ளதாக கூறப்படுகிறது. இதனை செயல்படுத்த வரி ஏய்ப்பில் ஈடுபடும் வணிக நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications