ரெய்டு நடத்தி எங்க பிணத்தைதான் பணியவைக்க முடியும்- திவாகரன்
வருமான வரி சோதனை நடத்துவதன் மூலம் எங்களை பணியவைக்க முடியாது என்றுதிவாகரன் கூறியுள்ளார்.
Recommended Video

சென்னை: வருமான வரி சோதனை மூலம் எங்களை பணியவைக்க முடியாது எங்கள் பிணத்தை தான் பணியவைக்க முடியும் என்று திவாகரன் கூறியுள்ளார்.
கடந்த வியாழக்கிழமை தொடங்கி 5 நாட்கள் சசிகலா குடும்பத்தினருக்கு சொந்தமான வீடுகள், கடைகள், பினாமிகளின் வீடுகளில் வருமான வரி சோதனை நடைபெற்றது.
சோதனையில் ஆவணங்களை, கணக்கில் வராத பணம், நகைகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. சசிகலா சகோதரர் திவாகரன் கல்லூரியில் பணம், நகைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
இளவரசியின் மகன் விவேக், மகள் கிருஷ்ணபிரியா, ஷகிலா, மருமகன்கள் வருமான வரி அலுவலகத்தில் ஆஜராகி விளக்கம் அளித்துள்ளனர்.

விளக்கம் தர உத்தரவு
மன்னார்குடியில் வீடு மற்றும் கல்லூரியில் கைப்பதற்றப்பட்ட ஆவணங்கள் மற்றும் ரொக்கம் குறித்து நடைபெறும் விசாரணைக்காக திருச்சியில் உள்ள வருமான வரி அலுவலகத்தில் திவாகரன் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று சம்மன் கொடுத்துள்ளனர்.

ரெய்டு பற்றி திவாகரன்
நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் செய்தியாளர்களிடம் பேசிய திவாகரன், இந்தியாவிலேயே மிக பெரிய சோதனை சசிகலா குடுமபத்தினரிடம் நடத்தப்பட்டுள்ளதாக கூறினார்.

அந்த சோதனை என்னவாச்சு?
ரெய்டில் ஐந்து கோடி ரூபாய் பறிமுதல் செய்ததாக கூறுகிறார்கள், ஆனால், மணல் மாஃபியா சேகர் ரெட்டி, அகில இந்திய மெடிக்கல் கவுன்சல் தலைவர் வீட்டில் நடைபெற்ற சோதனை என்னவானது?.

பிணத்தைதான் பணியவைக்கமுடியும்
வருமான வரி சோதனை மூலம் எங்களை பணியவைக்க முடியாது என்றும் எங்கள் பிணத்தை தான் பணியவைக்க முடியும் என்றும் திவாகரன் கூறியுள்ளார்.

ஓபிஎஸ், ஈபிஎஸ்
ஆளுநர் ஆய்வு நடத்தியதன் மூலம் மாநிலத்தின் உரிமையை முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வமும் விட்டு கொடுத்து விட்டனர் என்று குற்றம் சாட்டினார்.

சிடியை தேடியை அதிகாரிகள்
ஜெயலலிதா சிகிச்சை பெற்ற போது சசிகலா எடுத்த சிடி எங்கே என்றுதான் அதிகாரிகள் விசாரணையின் போது கேட்டனர். இந்த சோதனையே சிடியை தேடுவதற்காக நடத்தப்பட்ட சோதனைதான் என்றும் திவாகரன் கூறியுள்ளார்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications