பாமக, மதிமுக, கொ.ம.தே.க.வுக்காக தேமுதிக விட்டுக் கொடுத்த 4 தொகுதிகள்
சென்னை: பாஜக கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகளிடையே கடைசி நேரத்தில் சில விட்டுக் கொடுத்தல்கள் நடந்ததால்தான் உடன்பாடு சுமூகமாக எட்டப்பட முடிந்ததாம்.
இதில் தேமுதிகவின் பங்காக 4 தொகுதிகளை அவர்கள் விட்டுக் கொடுக்க முன்வந்தனராம். இதேபோல பாமக தரப்பிலும் சில தொகுதிகளை விட்டுக் கொடுத்துள்ளனராம்.

பாஜக கூட்டணியில் தேமுதிக, பாமக மற்றும் மதிமுக இடையேதான் தொகுதிகளைப் பெறுவதில் கடும் மோதல் இருந்தது. இதில் மதிமுக சற்று சாப்ட்டாகத்தான் இருந்தது. ஆனால் தேமுதிக, பாமக இடையேதான் ஈகோ கடுமையாக இருந்ததாக கூறுகிறார்கள்.
இறுதியில் இருவருமே சற்று இறங்கி வந்ததால் சுமூக உடன்பாட்டை முடிந்ததாம்.
அதன்படி காஞ்சிபுரம், அரக்கோணம், கிருஷ்ணகிரி, திருப்பூர் ஆகிய தொகுதிகளை தேமுதிக விட்டுக் கொடுத்ததாம். அதேபோல கள்ளக்குறிச்சி, சேலம் உள்ளிட்ட சில தொகுதிகளை பாமக விட்டுக் கொடுத்ததாம்.
இதில் அரக்கோணம், கிருஷ்ணகிரி ஆகிய இரு தொகுதிகளும் பாமகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் மதிமுகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அதேபோல தூத்துக்குடியையும் தேமுதிக விட்டுக் கொடுத்ததாக தெரிகிறது.
திருப்பூர் கொங்கு நாடு மக்கள் தேசியக் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications