ரேஷன் கடை சர்க்கரை விலை உயர்வைக் கண்டித்து போராட்டத்தை அறிவித்தார் விஜயகாந்த்
ரேஷன் கடைகளில் வழங்கப்படும் சர்க்கரை விலை உயர்வு - ஆர்ப்பாட்டத்தை அறிவித்தார் விஜயகாந்த்
சென்னை : நியாயவிலைக்கடைகளில் வழங்கப்படும் சர்க்கரை விலை உயர்வைக் கண்டித்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் ஆர்ப்பாட்டத்தை அறிவித்தார்.
கடந்த வாரம் தமிழக அரசு நியாயவிலைக்கடைகளில் 13 ரூபாய் 50 பைசாவிற்கு வழங்கப்பட்டு வந்த சர்க்கரையின் விலையை 24 ரூபாயாக உயர்த்தி உத்தரவிட்டது. மேலும், வறுமை கோட்டிற்கு கீழே இருப்பவர்களுக்கு மட்டுமே பழைய விலையில் வழங்கப்படும் என்றும் அறிவித்தது.

அரசின் இந்த அறிவிப்பு பல்வேறு தரப்பு மக்களும் கோபத்தை ஏற்படுத்தியது. மேலும் நியாயவிலைக்கடைகளை மூடப்போகும் திட்டத்தின் ஒரு அங்கமாகவே இந்த அறிவிப்பு பார்க்கப்படுகிறது. இதனால் பல்வேறு அரசியல் இயக்கங்களும் இந்த விலை உயர்வை திரும்பப் பெறக் கோரி ஆர்ப்பாட்டம் அறிவித்துள்ளனர்.
ஆனால், தமிழக அமைச்சர்கள் சர்க்கரை விலை உயர்வை நியாயப்படுத்தி பேசிவருகிறார்கள். இதுமக்களிடையே ஆத்திரத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில், தேமுதிக கட்சியின் தலைவர் விஜயகாந்த் இந்த விலை உயர்வைக் கண்டித்து ஆர்ப்பாட்டத்தை அறிவித்துள்ளார்.
மக்களின் விருப்பத்திற்கு எதிராக இந்த அரசு செயல்பட்டு வருகிறது. சர்க்கரை விலை உயர்வை அரசு திரும்பப்பெற வேண்டும். இதனை வலியுறுத்தி நவம்பர் 3ம் தேதி தேமுதிக சார்பில் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு விஜயகாந்த் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற இருக்கிறது என்று தேமுதிக தலைமை அறிவித்து இருக்கிறது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications