பண்ருட்டியார் விலகல்... இன்று தேமுதிக அவசர செயற்குழு கூடுகிறது
சென்னை: தேமுதிகவின் அவைத் தலைவரும் சட்டசபை எதிர்க்கட்சி துணைத் தலைவருமான பண்ருட்டி ராமச்சந்திரன் விலகிய நிலையில் இன்று அக்கட்சியின் அவசர செயற்குழு சென்னையில் கூடுகிறது.
தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு அரசியல் வழிகாட்டியாக இருந்தவர் பண்ருட்டி ராமச்சந்திரன். டெல்லி சட்டசபை தேர்தல் உள்ளிட்ட பல விவகாரங்களில் விஜயகாந்த் தமது ஆலோசனைகளை புறக்கணித்ததாக வருத்தத்தில் இருந்தார் பண்ருட்டி ராமச்சந்திரன்.

இதனால் அவர் திடீரென அக்கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்ததுடன் அரசியலுக்கும் முழுக்குப் போட்டுவிட்டார். இது தேமுதிகவுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதைத் தொடர்ந்து அக்கட்சியின் அவசர செயற்குழு கூட்டம் இன்று சென்னையில் கோயம்பேட்டில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் மாலை 4 மணிக்கு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இக்கூட்டத்தில் பண்ருட்டியாரின் விலகலைத் தொடர்ந்து அடுத்த கட்ட நடவடிக்கை மற்றும் நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்தும் விவாதிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.












Click it and Unblock the Notifications