கருணாநிதி மறைவுக்கு நாடாளுமன்றத்தில் இரங்கல்.. தலைச்சிறந்த தலைவர் என புகழாரம்
திமுக தலைவர் கருணாநிதியின் மறைவுக்கு நாடாளுமன்றத்தில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது.
Subscribe to Oneindia Tamil
சென்னை: திமுக தலைவர் கருணாநிதியின் மறைவுக்கு நாடாளுமன்றத்தில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது.
திமுக தலைவர் கருணாநிதியின் மறைவையொட்டி மத்திய அரசு இன்று ஒருநாள் துக்கம் அனுசரிக்கப்படும் என அறிவித்தது.

இந்நிலையில் கருணாநிதியின் மறைவுக்கு நாடாளுமன்றத்தில் இரங்கல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
லோக்சபாவில் சுமித் மகாராஜனும், ராஜ்ய சபாவில் வெங்கையா நாயுடுவும் இரங்கல் குறிப்பு வாசித்தனர்.
கருணாநிதி தலைச்சிறந்த தலைவர் என வெங்கையா நாயுடு புகழாரம் சூட்டினார். இரு அவைகளிலும் எம்பிக்கள் எழுந்து நின்று மவுன அஞ்சலி செலுத்தினர்.
இதைத்தொடர்ந்து இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டன.












Click it and Unblock the Notifications