ஜெ. மரணம்: சிகிச்சையளித்த மருத்துவர்கள் பட்டியலில் குளறுபடி.. விசாரணை ஆணையத்தில் திமுக மனு!
ஜெயலலிதா மரண விவகாரத்தில் சிகிச்சையளித்த மருத்துவர்கள் பட்டியலில் குளறுபடி இருப்பதாக திமுக விசாரணை ஆணையத்தில் மனு அளித்துள்ளது.
சென்னை: ஜெயலலிதா மரண விவகாரத்தில் சிகிச்சையளித்த மருத்துவர்கள் பட்டியலில் குளறுபடி இருப்பதாக திமுக விசாரணை ஆணையத்தில் மனு அளித்துள்ளது.
தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா கடந்த ஆண்டு டிசம்பர் 5-ம் தேதி காலமானார். அவரது மரணத்தில் மர்மம் இருப்பதாக அதிமுகவினரும், எதிர்க்கட்சியினரும் குற்றம் சாட்டினர்.
அதைத் தொடர்ந்து ஜெயலலிதா மரணத்தில் உள்ள மர்மங்கள் குறித்து விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையத்தை அரசு அமைத்துள்ளது. விசாரணையை தொடங்கியுள்ள நீதிபதி ஆறுமுகசாமி நவம்பர் 22ஆம் தேதிக்குள் ஜெயலலிதா மரணம் குறித்து தகவல் தெரிந்தவர்கள் விசாரணை கமிஷனில் தகவல் அளிக்கலாம் என தெரிவித்தார்.

ஜெ.மரணம் - திமுக மனு
இந்நிலையில் ஜெயலலிதா மரணம் தொடர்பாக திமுக ஆறுமுகசாமி விசாரணை கமிஷனில் மனு அளித்துள்ளது. மதுரை திருப்பரங்குன்றம் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட சரவணம் இந்த மனுவை அளித்துள்ளார்.

மருத்துவர்கள் பட்டியலில் குளறுபடி
அதில் அப்பல்லோ மருத்துவமனை செய்திக்குறிப்பிற்கும் மருத்துவ அறிக்கைக்கும் அதிக முரண்பாடு உள்ளது என அவர் கூறியுள்ளார். ஜெயலலிதாவுக்கு சிகிச்சையளித்த மருத்துவர்கள் பட்டியலில் குளறுபடி உள்ளதாகவும் அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகளவு கைரேகைகள்
அதாவது ஜெயலலிதாவுக்கு சிகிச்சையளித்த மருத்துவர்கள் பட்டியலில் மருத்துவர் பாலாஜியின் பெயர் இடம்பெறவில்லை என சரவணன் தனது மனுவில் தெரிவித்துள்ளார். மேலும் 4 தொகுதி தேர்தலுக்கு 20 கைரேகைகள் மட்டுமே பெறவேண்டும் ஆனால் ஜெயலலிதாவிடம் 28 கைரேகைகள் பெறப்பட்டிருப்பதாகவும் அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சூடுபிடித்தது ஜெ.மரண விவகாரம்
விசாரணை ஆணையத்தில் வேறு மாநில மருத்துவக்குழுவை அமைக்க வேண்டும் என்றும் திமுகவின் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எதிர்க்கட்சியான திமுக ஆரம்பத்தில் இருந்தே ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க வேண்டும் என வலியுறுத்தி வந்தது. இந்நிலையில் விசாரணை ஆணையத்தில் அக்கட்சி மனு அளித்திருப்பதால் ஜெயலலிதா மரண விவகாரம் சூடுபிடித்துள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications