ஆர்.டி.ஓ ஆபீசில் இதுக்குதான் எட்டு போடச் சொல்றாங்களா?
Subscribe to Oneindia Tamil
சென்னை: பருவமழை தொடங்கி விட்டாலே நம்மூர்களில் ரோடுகள் காணாமல் போய்விடும். அப்படியொரு சாலைதான் இந்த போட்டோவில் காணப்படுகிறது. லைசென்ஸ் கேட்டு போகும்போது வாகனத்தில் எட்டு போட்டு காட்ட சொல்வது ஆர்டிஓ விதிமுறை. நாம் சாலையில் நேராகத்தானே வாகனத்தை ஓட்டுகிறோம், அப்புறமும் எதற்காக எட்டு போட்டால்தான் லைசென்ஸ் தருவோம் என்று ஆர்டிஓக்கள் அடம் பிடிக்கிறார்கள் என்று எப்போதாவது உங்களுக்குள் கேள்வி எழுந்தது உண்டா? இனிமேல் அப்படியெல்லாம் கெக்கே.. பிக்கேன்னு கேக்கப்படாது.

குண்டும் குழியுமான நம்மூர் சாலைகளில் வளைந்து நெளிந்து, யூடர்ன் போட்டு என பலவித வித்தைகளை செய்து காட்ட வேண்டிய நிர்பந்தம் உள்ளதை அறிந்து, ஒரு தொலைநோக்கு பார்வையில்தான் ஆர்டிஓக்கள் அதை கேட்கிறார்கள் என்ற தெளிவு நமக்கு வர வேண்டும். இந்த தெளிவுதான் நம்மை எங்கோ கொண்டு போகப்போகிறது.












Click it and Unblock the Notifications