நகராட்சி கமிஷனரைப் பார்த்து குரைத்த நாய்.. சரமாரியாக அடித்துக் கொடூரமாக கொன்ற ஊழியர்கள்!
மேட்டூர் நகராட்சி கமிஷனரைப் பார்த்து சரமாரியாக குரைத்த நாயை, நகராட்சி ஊழியர்கள் கொடூரமாக அடித்துக் கொன்றனர்.
மேட்டூர்: சேலம் மாவட்டம் மேட்டூர் நகராட்சி ஆணையரைப் பார்த்து ஒரு தெரு நாய் குரைத்துள்ளது. இதனால் ஆவேசமடைந்த அந்த ஆணையர் கொடுத்த புகாரின் பேரில் நகராட்சி ஊழியர்கள் நாயை சரமாரியாக அடித்துக் கொன்ற செயல் மேட்டூரை அதிர வைத்துள்ளது.
பூலாம்பட்டி காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக இருப்பவர் கோபால். இவர் மேட்டூரில் வசித்து வருகிறார். இவர் நாய் வளர்த்து வருகிறார். இவரது வீட்டுக்கு எதிர் வீட்டில்தான் நகராட்சி ஆணையாளர் நாராயணன் வீடு உள்ளது. நாராயணன் வெளியே வரும்போதெல்லாம் கோபால் வீட்டு நாய் அவரைப் பார்த்து தொடர்ந்து குரைக்குமாம்.

கோபால் சொல்லிக் கொடுத்துதான் இப்படி நாய் குரைப்பதாக கருதிய நாராயணன், அதுகுறித்து மேட்டூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். மேலும் நகராட்சி ஊழியர்களிடமும் நாயை அடித்துக் கொல்லுமாறு அவர் கூறியதாக சொல்லப்படுகிறது. இதையடுத்து விரைந்து வந்த நகராட்சி ஊழியர்கள் அந்த நாயை அங்கிருந்து தூக்கிச் சென்றனர். பின்னர் அதை அடித்து தெரு வழியாக தரதரவென இழுத்து வந்தனர்.
இதை அந்தத் தெருவே பார்த்து அதிர்ச்சி அடைந்தது. சிலர் அதை செல்போனில் படம் பிடித்து இன்டர்நெட்டில் வெளியிட்டனர். இதனால் விவகாரம் பெரிதானது.
நாயைக் கொடூரமாக அடித்துக் கொன்ற செயலுக்கு விலங்குகள் நல ஆர்வலர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்த செயலுக்குக் காரணமான நகராட்சி ஆணையர் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-
விஜய்க்கு எதிராக பெரம்பூர், திருச்சியில் கிழக்கில்.. களமிறங்கும் திமுக, அதிமுக வேட்பாளர்கள் யார்? -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
அரசியலன்னா இதுதான்.. எப்போ என்ன நடக்கும்னே தெரியாது.. ஸ்டாலின் டிக் அடித்த பெயர்.. பலர் ஷாக் -
இதுவரை திமுக ஜெயிக்காத.. கோவை தெற்கு தொகுதியைத் கேட்டு வாங்கிய செந்தில் பாலாஜி.. என்ன காரணம்? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
ஜெயலலிதா ஸ்டைலை பின்பற்றும் விஜய்! ‘டபுள் தொகுதி’ ஃபார்முலாவை கையில் எடுத்தது ஏன்? இதுவரை யார் யார்? -
திமுக தேர்தல் அறிக்கை LIVE: மகளிர் உரிமை தொகை, புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் தொகை உயர்வு! -
மத்தி, சென்னையை கிளீன் ஸ்வீப் செய்யும் திமுக! தெற்கு, வடக்கில் ட்விஸ்ட்! அப்போ அரியணை? வெளியான சர்வே -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்! -
விஜய்க்கு சத்தமின்றி எடப்பாடி வைத்த செக்.. சம்பவம் பண்ணிட்டாரே.. ஸ்டாலினும் விடலையே.. கேம் ஓவர்? -
பெரம்பூர், திருச்சி கிழக்கு தொகுதிகளில் சி. ஜோசப் விஜய்.. 2 தொகுதிகளில் போட்டியிடும் தவெக தலைவர்!












Click it and Unblock the Notifications