தெலுங்கானா பிரச்சினையே முடியலை… திருப்பதியை தமிழ்நாட்டுடன் இணைக்கச் சொல்லும் ராமதாஸ்
சென்னை: ஆந்திர மாநிலத்தில் தமிழர்கள் வாழும் திருப்பதி, காளஹஸ்தி உள்ளிட்ட பகுதிகளை தமிழ்நாட்டுடன் மீண்டும் இணைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மீண்டும் கூறியுள்ளார்.
இதுகுறித்து டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
தெலுங்கானா தனி மாநிலத்தை உருவாக்குவதற்கான சட்ட முன் வரைவு நாடாளுமன்ற மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டு, குரல் வாக்கெடுப்பின் மூலம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது.

தெலுங்கானா தனி மாநிலக் கோரிக்கை கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பே நிறைவேற்றப்பட்டிருக்க வேண்டும். தெலுங்கானா பகுதி பிரிக்கப்படுவதால் சீமாந்திரா பகுதி மக்களிடையே நிலவும் கவலைகளைப் போக்கவும் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மொழிவாரி மாநிலங்கள் உருவாக்கப்பட்டபோது தெலுங்கானாவுக்கு இழைக்கப்பட்ட துரோகம் இப்போது சரி செய்யப்பட்டுள்ள நிலையில், தமிழ்நாட்டிற்கு செய்யப்பட்ட அநீதி மட்டும் அப்படியே தொடருகிறது.
தப்பிய திருத்தணி
1956-ம் ஆண்டில் சென்னை மாகாணத்தைப் பிரித்து ஆந்திர மாநிலம் உருவாக்கப்பட்ட போது, அப்போதைய வட ஆற்காடு மாவட்டத்தின் அங்கமாக விளங்கிய தமிழர்கள் அதிகம் வாழும் 9 வட்டங்கள் ஆந்திராவுடன் இணைக்கப்பட்டன. இதை எதிர்த்து தமிழக மக்கள் நடத்திய கடும் போராட்டத்தின் விளைவாக திருத்தணி வட்டம் மட்டும் மீண்டும் தமிழ்நாட்டுடன் இணைக்கப்பட்டது.
8 தாலுகாக்கள் இணைப்பு
திருப்பதி, காளஹஸ்தி, புத்தூர், சித்தூர், சத்தியவேடு உள்ளிட்ட 8 வட்டங்கள் ஆந்திரத்துடனேயே இணைந்திருக்கின்றன. இதுதவிர தமிழர்கள் அதிகம் வாழும் தேவி குளம், பீர்மேடு உள்ளிட்ட சில பகுதிகள் கேரளத்துடனும், இன்னும் சில பகுதிகள் கர்நாடகத்துடனும் இணைக்கப்பட்டன.
வேலைவாய்ப்பு மறுப்பு
இந்த மாநிலங்களுடன் இணைக்கப்பட்ட பகுதிகளில் வாழும் தமிழர்கள் இன்னும் அடிமைகளாகவே நடத்தப்படுகின்றனர். ஆந்திராவில் கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் தெலுங்கு பேசும் மக்களுக்கே முன்னுரிமை அளிக்கப்படுகிறது என்பதால், தங்களுக்கு கல்வியும் வேலைவாய்ப்பும் மறுக்கப்படுகிறது என்று அங்குள்ள தமிழர்கள் குமுறுகின்றனர்.
தமிழகத்துடன் இணைக்க
தமிழகத்தில் தான் தங்களால் நிம்மதியாக வாழ முடியும் என நினைக்கும் மக்கள், தாங்கள் வாழும் பகுதிகளை தமிழகத்துடன் இணைக்கும்படி கோருகிறார்கள்.
கேரளத்துடன் இணைக்கப்பட்ட பகுதிகளில் வாழும் தமிழர்களும் நிலவுரிமை மற்றும் வாழ்வுரிமை இழந்து தவிப்பதால் தமிழகத்துடன் இணையவே விரும்புகின்றனர்.
பிரித்தவைகளை இணையுங்கள்
எனவே மொழி வாரி மாநிலங்கள் அமைக்கப்பட்டபோது, அண்டை மாநிலங்களுடன் இணைக்கப்பட்ட தமிழர்கள் வாழும் திருப்பதி, காளஹஸ்தி உள்ளிட்ட பகுதிகளை தமிழ்நாட்டுடன் மீண்டும் இணைத்து நீதி வழங்க மத்திய அரசு முன்வர வேண்டும்.
இதை வலியுறுத்தும் தீர்மானத்தை தமிழக சட்டப்பேரவையின் நடப்புக் கூட்டத்திலேயே அனைத்துக் கட்சி உறுப்பினர்களின் ஒருமனதான ஆதரவுடன் நிறைவேற்ற வேண்டும் என்று டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.
-
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்?












Click it and Unblock the Notifications