நாங்கள் முதல்வர் ஆக ஒரு தலையணையே போதும் என சொன்ன சசி கணவர் நடராஜன்- சேதுராமன் 'ஷாக்' பேச்சு
முதல்வர் நாற்காலியில் நாங்கள் உட்காருவதற்கு ஒரே ஒரு தலையணை போதும் என சசிகலா கணவர் நடராஜன் பேசியதாக மூவேந்தர் முன்னணி கழக தலைவர் சேதுராமன் வெளியிட்ட தகவல் பரபரப்பை கிளப்பியுள்ளது.
சென்னை: முதல்வர் நாற்காலியில் உட்கார தங்களுக்கு ஒரே ஒரு தலையணை இருந்தாலே போதும் என சசிகலாவின் கணவர் நடராஜன் கூறியதாக மூவேந்தர் முன்னணி கழகத் தலைவர் டாக்டர் சேதுராமன் வெளியிட்ட தகவல் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
ஜெயலலிதா மர்ம மரணத்துக்கு சிபிஐ விசாரணை கோரி சென்னை உட்பட தமிழகத்தில் 36 இடங்களில் ஓபிஎஸ் அதிமுகவினர் நேற்று உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டங்களில் அதிமுகவின் பல்லாயிரக்கணக்கில் திரண்டனர். இது சசிகலா அணியினரை கடும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

ஓபிஎஸ் உண்ணாவிரதம்
சென்னையில் முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தலைமையில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. இதில் மூவேந்தர் முன்னணி கழகத் தலைவர் டாக்டர் சேதுராமன் பங்கேற்று பேசியதாவது:

நடராஜன் பிரஸ் மீட்
ஜெயலலிதா உயிருடன் இருந்தபோது சசிகலாவின் கணவர் நடராஜன் பிரஸ் மீட் ஒன்றை நடத்தினார். அந்த பிரஸ் மீட் முடிவில் ஆப் த ரெக்கார்டாக சில பத்திரிகையாளர்களிடம் நடராஜன் பல விவகாரங்களை பேசினார்.

2 மாதத்தில் சி.எம்
அப்போது அடுத்த 2 மாதத்தில் நாங்கள் முதல்வர் பதவியை கைப்பற்றிவிடுவோம் என கூறியிருக்கிறார். தேர்தல் தற்போதுதானே முடிவடைந்துள்ளது... அதற்குள் எப்படி முதல்வராக முடியும்? மீண்டும் தேர்தல் என்றால் பல ஆயிரம் கோடி ரூபாய் செலவாகுமே என சில பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பியிருக்கின்றனர்.

ஒரே ஒரு தலையணை போதுமே
ஆனால் நடராஜனோ, நாங்க முதல்வர் ஆவதற்கு எதுக்கு அத்தனை ஆயிரம் கோடி செலவு செய்யனும்? ஒரே ஒரு தலையணை போதுமே... முதல்வர் ஆகிவிடுவோமே என நடராஜன் கூறியிருந்தார். இந்த தகவலை என்னிடம் பத்திரிகையாளர்கள் தெரிவித்த போது அதிர்ச்சியடைந்தேன். இவ்வாறு சேதுராமன் கூறினார்.
சேதுராமனின் இந்த பேச்சு பெரும் பிரளயத்தையே ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications