வறட்சியை நோக்கி மேற்குத்தொடர்ச்சி மலை பகுதி நீர் நிலைகள்.. தவிப்பில் மக்கள்
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் உள்ள நீர் நிலைகள் தண்ணீர் இன்றி வறட்சி நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
தென்காசி: நெல்லை மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் அதிக நீர்தேக்ககங்கள், அருவிகள் என நிரம்ப பெற்ற பகுதியாக விளங்குவது தென்காசி வட்டாரப்பகுதிகள் ஆகும். இந்த பகுதிகள் இயற்கை அன்னையின் கொடையாக விளங்கி வரும் நிலைமாறி கோடையின் வறட்சி பிடியில் சிக்கிவருகிறது.
குற்றாலம் மெயின் அருவிக்கு மேற்குத் தொடர்ச்சி மலையில் இருந்து உற்பத்தியாகி வரும் சித்ரா நதியில் தண்ணீர் வரத்து முற்றிலுமாக நின்றதால் குற்றால மெயினருவி வறண்ட நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இதேபோல் ஐந்தருவி, பழைய குற்றால அருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளும் தண்ணீரின்றி வறண்ட நிலைக்கு சென்றுள்ளது.

மேலும் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியிலுள்ள செங்கோட்டை குண்டாறு நீர்த்தேக்கம், மேக்கரை அடவிநயினார் நீர்த்தேக்கம், கடையநல்லூர் கருப்பா நதி நீர்த்தேக்கம், புளியரை ஸ்ரீமூலப் பேரி நீர்த்தேக்கம், மோட்டை நீர்த்தேக்கம் உள்ளிட்ட நீர்தேக்கங்களுக்கு மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் இருந்து தண்ணீர் வரத்து முற்றிலுமாக நின்றுவிட்டதால் இங்குள்ள அனைத்து நீர்தேக்கங்களும் வறண்டு வருகின்றன.
அவசர குடி நீர்த்தேவைகளுக்காக கருப்பா நதியில் 35கன அடி நீரும், அடவிநயினார் நீர்த்தேக்கத்தில் 45 கன அடி நீரும், குண்டாற்றில் 20கன அடி நீரும், பிற சிறிய அணைகளில் குறைந்தளவே தண்ணீர் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. அனைத்து ஆறு, குளங்களும், தனியார் கிணறுகளும் தண்ணீரின்றி வறட்சியான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
குடிநீருக்காக மக்கள் தனியார் நிலங்களைத்தேடி அலையும் கொடுமையும் நிகழ்ந்து வருகிறது. தென்காசி, செங்கோட்டை, குற்றாலம், கடையநல்லூர், புளியரை உள்ளிட்ட பகுதிகளில் பகுதிகளில் இப்போதே வறட்சியின் கோரமுகம் தலைத்தூக்க தொடங்கியுள்ளதால் மக்கள் தண்ணீருக்காக அலையும் அவலமும் அரங்கேறி வருகிறது.
இந்த கோடையை பயன்படுத்தி கிராம, ஊராட்சி, பேரூராட்சிகளில் புதிய ஆழ்துளைக் கிணறு அமைக்கும் பணியிலும், பழைய ஆழ்துளை கிணறுகளை பராமரிப்பு என்ற பணியில் பணத்தை சுருட்டும் பணியில் சில அரசு அதிகாரிகளும் களத்தில் குதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
-
ஆலங்குளம் அருகே 6 பேர் அரிவாளால் வெட்டப்பட்ட வழக்கில் ஷாக்.. ஒருவரை சுட்டுப் பிடித்தது போலீஸ்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications