நல்லா குடிச்சாச்சு.. எழுந்திருக்க முடியலை.. தண்டவாளத்திலேயே படுத்துத் தூங்கியவரின் இரு கால்களும் கால

Subscribe to Oneindia Tamil

சேலம்: நன்கு குடித்ததால் போதை தலைக்கேறி எழுந்திருக்க முடியாததால் தண்டவாளத்திலேயே படுத்துத் தூங்கி விட்ட ஒரு குடிகாரர் தனது இரு கால்களையும் ரயிலுக்குப் பறி கொடுத்து கதறிக் கொண்டிருக்கிறார் இப்போது.

சேலம் பொன்னம்மாபேட்டை பகுதியில் சேலம்-கடலூர் மார்க்கத்திலான ரயில் பாதை உள்ளது. இங்குள்ள ரயில்வே கேட்டை கடந்ததும் ரயில்வே துறைக்கு சொந்தமான நிலம் உள்ளது. புதர்கள் நிரம்பியுள்ள இந்தப் பகுதியில் தினசரி பலரும் உட்கார்ந்து ஜாலியாக மது அருந்துவது வழக்கம். ரயில் தண்டவாளத்தையொட்டி உள்ள பகுதி என்பதால் அதன் ஆபத்தைப் பற்றி யாரும் கவலைப்படுவதே கிடையாது.

நேற்றும் மாலையில் சிலர் கூடி மது அருந்தியுள்ளனர். அதில் ஒரு நபர் ஓவராக குடித்ததால் போதை தலைக்கேறி எழுந்திருக்கக் கூட முடியாமல் தண்டவாளத்தில் விழுந்து விட்டார். அப்படியே படுத்து விட்டார். அவரது இரு கால்களும் தண்டவாளத்தில் கிடந்தன. உடல் வெளியே கிடந்தது. அப்போது அந்த வழியாக சேலம் - விருத்தாச்சலம் பயணிகள் ரயில் வந்துள்ளது. அந்த ரயில் இ்நத நபரின் மேல் ஏறியது. இதில் அவரின்இரு கால்களும் துண்டிக்கப்பட்டு விட்டன.

ரத்தம் வெளியேற மயங்கிக் கிடந்த அந்த நபரை அப்பகுதி வழியாக போனவர்கள் பார்த்து ரயில்வே போலீஸாருக்குத் தகவல் சொல்லி அவரை மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இவர் யார் எந்த ஏரியாவைச் சேர்ந்தவர் என்பது தெரியவில்லை.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+