நண்பனே இனி இனம் பார்த்து பழகு.. களம் பார்த்து கால் வை.. இது துரைமுருகன் அட்வைஸ்.. யாருக்கு தெரியுமோ?
ஈரோடு: நண்பனே இனி இனம் பார்த்து பழகு, களம் பார்த்து கால் வை என்று துரைமுருகன், வைகோவுக்கு அட்வைஸ் வழங்கியுள்ளார்.
ஈரோடு மாவட்டம் மேட்டுக்கடை பகுதியில் மதிமுகவின் மாநில மாநாடு மற்றும் முப்பெரும் விழா நடைபெற்றது. பெரியார் பிறந்த நாள் விழா, மதிமுக வெள்ளி விழா, வைகோவின் பொது வாழ்வு பொன் விழா ஆகியன முப்பெரும் விழாவாக கொண்டாடப்பட்டது.
விலாசம்
இந்த விழாவில் திமுக பொருளாளர் துரைமுருகன் கலந்து கொண்டார். அவர் பேசுகையில் நானும் வைகோவும் கருணாநிதியால் வளர்க்கப்பட்டவர்கள். அவரால் விலாசம் கிடைக்கப் பெற்றவர்கள்.
பார்த்து பழகு
எந்த உயரத்தில் பறந்தாலும் கருணாநிதி என்ற சக்தி எங்கள் இதயத்தில் இருப்பதால் தான் எங்களால் அரசியலில் இருக்க முடிகிறது. நண்பனே இனி இனம் பார்த்து பழகு, களம் பார்த்து கால் வை.
இரங்கல்
நானும் வைகோவும் அரசியலுக்கு அப்பாற்பட்டு நண்பர்கள் என்றார். முன்னதாக இந்த விழாவில் மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கும் முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கும் இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தீர்மானம்
விழாவில் தி.க தலைவர் கி.வீரமணி, நடிகர் சத்யராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கருணாநிதியின் உருவப்படமும் திறக்கப்பட்டது. இந்த விழாவில் மத்திய பாஜக மற்றும் மாநில அதிமுக அரசு ஆகியவற்றை வீழ்த்துவதற்கு திமுக தலைமையில் தோழமைக் கட்சிகளுடன் அணி சேர்ந்து மதிமுக தனது கடமையை மேற்கொள்ளும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.