அதிமுகவின் எந்த அணியோடு திமுக கூட்டணி.. கருணாநிதி சொன்னது என்ன? ரகசியம் உடைத்த துரைமுருகன்!
ஜெயலலிதா மறைவிற்குப் பிறகு அதிமுக இரண்டு அணிகளாகப் பிரியும் அவ்வாறு பிரிந்தால் எந்த அணியுடனும் திமுக கூட்டணி வைக்கக் கூடாது என்று கருணாநிதி முன்கூட்டியே சொல்லிவிட்டதாக துரைமுருகன் கூறியுள்ளார்.
Recommended Video

சென்னை : ஜெயலலிதா மறைவிற்குப் பிறகு அதிமுக பிளவுபடும், அப்படி பிரிந்தால் எந்த அணியுடனும் கூட்டணி வைக்கக் கூடாது என்று திமுக தலைவர் கருணாநிதி கடந்த ஆண்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் முன்னர் சொல்லிவிட்டு சென்றதாக அந்த கட்சியின் முதன்மை செயலாளர் துரைமுருகன் கூறியுள்ளார்.
ஜெயா டிவியின் விடைக்குள் வினா நிகழ்ச்சியில் திமுகவின் முதன்மைச் செயலாளர் துரைமுருகனின் பேட்டி ஒளிபரப்பானது. அந்த நிகழ்ச்சியில் நெறியாளரின் கேள்விகளுக்கு துரைமுருகன் பதிலளித்தார். அப்போது தற்போதைய அரசியல் சூழலில் கருணாநிதி இருந்திருந்தால் காட்சிகளே மாறி இருக்கும் என்று அனைவரும் கூறுகிறார்களே.
அவ்வாறு கருணாநிதி இருந்திருந்தால் என்ன மாற்றம் நடந்திருக்கும் என்று நெறியாளர் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த துரைமுருகன்,
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது, கருணாநிதியும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனை செல்லும் முன்னர் அவர் நான், ராஜா, பொன்முடி உள்ளிட்டோர் இருந்த போது ஒரு ஒரு செய்தியை சொல்லிவிட்டுப் போனார்.

கருணாநிதி சொன்ன ரகசியம்
அப்போது ஜெயலலிதா உடல்நிலை தேறி வீடு திரும்ப வேண்டும். அவ்வாறு இல்லாமல் வேறு ஏதேனும் நடந்தால் நிச்சயம் அந்த கட்சி இரண்டாகப் பிரியும்.அப்படி கட்சி பிரியும் போது ஏதேனும் ஒரு அணி நம்மிடம் வந்து ஆதரவு கேட்கலாம். அப்படி ஆதரவு கேட்டால் கூட யாருக்கும் ஆதரவளிக்கக் கூடாது. எம்ஜிஆர் மறைவின் போது அதிமுக ஜானகி அணி, ஜெ. அணி என பிரிந்த போதும் என்னிடம் வந்து ஆதரவு கேட்டார்கள் ஆனால் அப்போது நான் மறுத்துவிட்டேன்.

பிறர் தோளில் பயணம் கூடாது
ஒருவேளை நீங்கள் யாருடைய அணிக்காவது ஆதரவு தெரிவித்தால் அது வரலாற்றில் அவப்பெயரை ஏற்படுத்தி விடும். மக்கள் நம்மை ஏற்க மாட்டார்கள், பிரத்தியார் தோளில் எப்போதுமே பயணிக்கக் கூடாது. தேர்தலில் போட்டியிட்டு மக்களின் வாக்குகளைப் பெற்று தான் ஆட்சியில் அமர வேண்டும்.

புறவாசல் ஆட்சி கூடாது
அதை விடுத்து ஏதோ ஒரு அணியை ஆதரித்து அவர்கள் ஆட்சி அமைத்தாலோ, அல்லது அவர்கள் ஆதரவில் திமுக ஆட்சியில் அமர்ந்தாலோ மக்கள் மன்னிக்க மாட்டார்கள். புறவாசல் வழியாக எந்த காரணத்தைக் கொண்டும் ஆட்சியில் அமரக் கூடாது என்று கருணாநிதி எங்களிடம் சொல்லிவிட்டார்.

ஆளுநரிடம் முறையிட்டோம்
எனவே எதிர்க்கட்சி என்ற முறையில் இந்த ஆட்சிக்கு எதிராக அரசியல் விதிப்படி என்ன செய்யவேண்டுமோ அதைத்தான் திமுக செய்து கொண்டிருக்கிறது. ஆளுநரை சந்தித்து அவர்களுக்கு பெரும்பான்மை இல்லை என்பதைச் சொன்னோம். ஆனால் முடிவு எடுக்க வேண்டிய ஆளுநர் மத்திய அரசின் அனுமதிக்காக காத்திருந்தார் என்று துரைமுருகன் கூறினார்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications