அண்ணாமலையார் கோவிலில் நெய் தீபம் ஏற்றி துர்கா ஸ்டாலின் என்ன வேண்டினார்?
Subscribe to Oneindia Tamil
திருவண்ணாமலை: திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலினின் மனைவி துர்கா அண்ணாமலையார் கோவிலில் நெய் விளக்கு ஏற்றி வழிபட்டார்.

திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின் திருவண்ணாமலையில் நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். அவருடன் அவரது மனைவி துர்காவும், மகன் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரும் வந்திருந்தனர்.
துர்கா நேற்று காலை அண்ணாமலையார் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். அவர் அண்ணாமலையார் மற்றும் உண்ணாமுலையம்மனை வழிபட்டார்.
அதன் பிறகு அவர் நவக்கிரக சன்னதியில் நெய் விளக்கு ஏற்றி சாமி கும்பிட்டார். சாமி தரிசனம் முடிந்த கையோடு கிளம்பிவிடாமல் அம்மன் சன்னதியில் சிறிது நேரம் அமைதியாக உட்கார்ந்திருந்துவிட்டு சென்றார்.
தேர்தல் நேரத்தில் அவர் நெய் விளக்கு ஏற்றி திமுக வெற்றி பெற வேண்டியிருக்கலாம் என்று கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications